படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். "மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்" (திருமந். 2031). பரவன் - பரதவன் = 1. மீன் பிடிப்போன். "மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்" (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். "தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378). பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். "படர்திரைப் பரதர் முன்றில்" (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. "பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2). 3. வணிகன். "பரத குமரரும்" (சிலப். 5:158). பரதவர் கடலோடிகளும் (Mainers)சுற்றுக் கடலோடிகளுமா யிருந்ததனால் (Circumnavigators),வடதிசைச் சென்று வடபார் முனையில் சிற்சிலவேளைகளில் தோன்றும் வண்ணவொளியைக் கண்டு,அதற்கு வடவை யென்று பெயரிட்டனர். வடம் - வடவை = வடதிசை நெருப்பு. "வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து" | (தனிப்பாடல்). |
வடவனல் = வடவை. "அக்கடலின் மீது வடவனல் நிற்க விலையோ" | (தாயு. பரிபூர.9) |
"வெள்ளத் திடைவாழ் வடவனலை" | (கம்பரா.தைலமா.86) |
வடவனலம் = வடவை கடுகிய வடவன லத்திடை வைத்தது" | "(கலிங். 402) |
வடம் - வடந்தை = வடதிசையிலுள்ளது,வடகாற்று. வடந்தைத்தீ = வடவை."சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்" | (காஞ்சிப்பு. இருபத். 384). |
உத்தர மடங்கல் = வடவை (திவா.).உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன்போல்உலகையழிக்கும் ஊழித்தீ. உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ,வடவை (பிங்.). பாரின் தென்முனையிலும் வடவை போன்றஒளி தோன்று மேனும், ஆரியர் வருகைக்கு முற்பட்டபண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டுபோனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும்இறந்துபட்டது.
|