பக்கம் எண் :

தமிழர் வரலாறு-181

வடவனல் குமரிநாடு முழுகு முன்னரேகண்டுபிடிக்கப்பட்ட தேனும், அதைப்பற்றியகுறிப்புள்ள இற்றைப் பண்டைநூல் 7ஆம்நூற்றாண்டினதான திவாகரமே. எனினும் வடவையை முதன்முதல் கண்டவன் தமிழனே என்பதற்கு, அதுவே போதியசான்றாம். ஏனெனின், இற்றை யறிவியல்களைக் கண்டமேனாட்டாரும் அதை 17ஆம் நூற்றாண்டிலேயேஅறிந்தனர். காசந்தி (Gassendi)என்னும் பிரெஞ்சிய அறிவியலார் 1621-ல் அதைக்கண்டு அதற்கு 'வடவிடியல்' (Aurora Borealis)என்று பெயரிட்டனர். இன்று அப் பெயர்க்கு வடவொளியென்றே பொருள் கொள்ளப்படுகின்றது,. அதன்விளக்கம்:

"A luminous atmosphericphenomenon, now considered to be of electrical character, occurring in thevicinity of, or radiating from, the earth's northern or southern magnetic pole,and visible from time to time by night over more or less of the adjoininghemisphere, or even of the earth's surface generally; popularly called theNorthern (or Southern) Lights............" என்று எருதந்துறை ஆங்கிலப்பேரகரமுதலியிற் கூறப்பட்டுள்ளது.

தமிழ்ப்பெயரும் இலத்தீனப் பெயரும்ஏறத்தாழ முற்றும் பொருளொத்திருத்தல் காண்க.

நிலவணிகர் வடக்கிற் பனிமலைவரையும்வடமேற்கில் மேலையாசியாவரையும், நீர்வணிகர்பல்திசையிலுமுள்ள அக்கரை நாடுகள்எல்லாவற்றிலும் பேசப்படும் மொழிகளை யெல்லாங்கேட்டபின், தம் மொழி ஒன்றிலேயே ழகரம்சிறப்பா யொலித்தலைக் கண்டு, அதற்குத் தமிழ்என்று பெயரிட்டிருக்கலாம்.

தம்-தமி=1. தனிமை. "தமிநின்று"(திருக்கோ. 167). 2. ஒப்பின்மை (சங். 81).

தமி + ழ் = தமிழ் (தனிமையாகழகரத்தைக் கொண்ட மொழி). தமிழ் - தமிழம்.

தமிழின் இனிமையையும் தமிழப்பண்பாட்டின் சீர்மையையும் நோக்கி,

"இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்" 

(10:580)

என்றார் பிங்கல முனிவர். அவ்விரண்டும் வழிப்பொருளே யன்றித் தமிழ் என்னுஞ்சொல்லின் வேர்ப்பொரு ளாகா.

சொல்லமைப்பும், செம்மரபும், இலக்கணவொழுங்கும், ஐவகைத் தொடை யமைந்த நால்வகைப்பாவின் இன்னோசையும், பொருளிலக்கணமும்,சிறப்பாக அகப்பொருட்டுறைகளும்,