பக்கம் எண் :

82தமிழர் வரலாறு-1

இன்கதை தழுவியவனப்பியலும், தமிழின் இனிமையையும்;பொருண்மொழிப் பாக்களும் அரசியல் நூலும் அறநூலும்மெய்ப்பொருள்நூலும் தமிழப் பண்பாட்டின்நேர்மையையும் காட்டும்.

அகப்பொருட் டுறைகளின் இனிமையைநுகர்ந்தே, மாணிக்க வாசகர் யாவையும் பாடியபின்கோவையும் பாடி, அதில்,

"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்

சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ........." 

(திருக்கோ.20)

 என்று, தம் சிறப்பான ஈடுபாட்டைக்குறிப்பாகத் தெரிவித்தார்.

இரும்புக்காலத்தில், வெண்பா முதலியநால்வகைப் பாக்களுள் முதல் இரண்டின் கலப்பால்மருட்பா என்னும் கலவைப் பாவும், கலிப்பாவின்திரிபால் பரிபாடல் என்னும் திரிபாவும்தோன்றின. இசை, நாடகம், மருத்துவம், சமையல்,கணக்கு, கணியம், ஏரணம், மறை, மெய்ப்பொருள்முதலிய பல்துறைக் கலைகளும் அறிவியல்களும்பற்றியநூற்றுக்கணக்கான நூல்களும்; அம்மை, அழகு, தொன்மை,தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகைவனப்பியலும் தோன்றியிருத்தல் வேண்டும்.மொழியுடன் இசையும் நாடகமும் இணைக்கப்பட்டு,இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வழக்கும்ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஐந்திணைச் சொற்களும்சேர்ந்து, தமிழ் பெருவளம் பெற்றிருந்தது.


தலைக்கழகம்

முத்தமிழும் ஒருங்கே கற்ற புலவர்நூற்றுக்கணக்கினர் தோன்றியதனால், பழையஇலக்கியத்தை ஆராயவும் புதிய இலக்கியத்தைஇயற்றவும், பாண்டியன் பஃறுளி யாற்றங்கரைமேலிருந்த மதுரையென்னும் தன் தலைநகரில் ஒருகழகம் நிறுவினான். அதன் உறுப்பினர் ஐந்நூற்றுநாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுநாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர்பாடினாரென்றும், அவராற் பாடப்பட்டன முதுநாரையும்முதுகுருகும் களரியாவிரையும் பல பரிபாடலும்பிறவுமென்றும், அக் கழகத்தை நடத்தி வந்தபாண்டியர் காய்சினவழுதி முதல் கடுங்கோன்ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்றும், அவருட்பாவரங்கேறினார் எழுவரென்றும், அக் கழகம் இருந்தகால நீட்சி நாலாயிரத்து நானூற்றுநாற்பதாண்டென்றும் இறையனா ரகப்பொருள்உரையிற் சொல்லப்பட்டுள்ளது.