பக்கம் எண் :

தமிழர் வரலாறு-183

அக் கழக வுறுப்பினர் பெயர்கள்இறந்துபட்டன. அகத்தியர் இடைக்கழகக்குலைவிற்குப்பின் வடநாட்டினின்று வந்த ஆரியர்.முதலிரு கழக வுறுப்பினரும் தூய தமிழராவர். சிவன்பெயரும் முருகன் பெயருங் கொண்ட இருவர் தலைக்கழகவுறுப்பினரா யிருந்திருக்கலாம். முரஞ்சியூர்முடிநாகராயர் கி.மு. பத்தாம் நூற்றாண்டுப் பாரதகாலத்தவர். நிதியின் கிழவன் என்பது. வடதிசைத்தலைவனைக் குறிக்கும் தொல்கதைக் கட்டுப்பெயர்.

தலைக்கழகம் கி. மு. 10,000 போல்தோன்றியது. அக்காலத்து மக்கள்இக்காலத்தாரினும் மிக நீண்டு வாழ்ந்திருப்பராதலால், சராசரி ஆளுக்கு 50 ஆண்டுவைத்துக்கொள்ளின், 86 பாண்டி யருக்கும் 4450ஆண்டாகும். முக்கழக வரலாற்றிற்குறிக்கப்பட்டுள்ள கால நீட்சி 4440 ஆண்டு. இதுமுற்றும் பொருத்தமானதும் நிகழ்ந்திருக்கக்கூடியதுமாகும்.

தலைக்கழகத்திற்கு அளவை நூலாயிருந்தமாபிண்ட நூற் பெயரும் மறைந்துவிட்டது. அகத்தியம்ஒரு மாபிண்டமாயினும், இடைக்கழகத்திற்குப்பிற்பட்டதாதலின், தலைக்கழக நூலாயிருந்திருக்கமுடியாது. எழுத்து, சொல், பொருள் என்னும்முக்கூற் றிலக்கணமுங் கொண்ட இயற்றமிழ் நூல்பிண்டம்; இயலிசை நாடகம் என்னும்முத்தமிழிலக்கணமுங் கொண்ட நூல் மாபிண்டம்.ஒவ்வொரு தமிழும் இலக்கணம் இலக்கியம் என்னும்இருபாற் பட்டது. முத் தமிழ்க்கும் இலக்கணம் ஒரேநூலாயிருக்கும்; ஆயின், இலக்கியம் வெவ்வேறுவனப்புகளாகவும் பனுவல்களாகவும் இருக்கும்.இயற்றமிழிலக்கணப் பொருட்கூற்றில் யாப்பும்உவமை யென்னும் அணியும் அடங்கும்.

தலைக்கழகம் வரலாற்றிற் கெட்டாததொன்மையதாதலால், அதைப்பற்றிய வண்ணனையிற்சில விளத்தங்கள் கி.பி.6ஆம் அல்லது 7ஆம்நூற்றாண்டில் வரையப்பட்ட வுரையில், தவறாகக்குறிக்கப்பட்டிருப்பது இயற்கையே.

தலைக்கழகம் தொடங்கியபின்,உலகியற் கலைகளும் அறி வியல்களும் வளர்ந்துவந்ததுபோன்றே, மதவியல் ஆராய்ச்சியும் ஆழ்ந்துவளர்ந்தது. சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும்மேற்பட்ட, கடவுள் நெறியென்னும் பொது நெறியும்கண்டறியப்பட்டது. பொதுமக்கள் சிறுதெய்வவணக்கத்தையும், புலமக்கள் பெருந்தேவ மதத்தையும்,துறவியர் கடவுள் நெறியையும் கடைப்பிடித்தனர்.

ஆயின், காளி போர்வெற்றித்தெய்வமாகவும் அம்மை நோய்த் தெய்வமாகவுங்கருதப்பட்டதனால், நாளடைவில் ஐந்திணைப் பொதுத்தெய்வமானாள். தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி