பக்கம் எண் :

88தமிழர் வரலாறு-1

செருப்பு, திருப்பு, நெருப்பு, பருப்புஎன்பவற்றை, முறையே, செப்பு, திப்பு, நிப்பு, பப்புஎனத் தெலுங்கில் திரிப்பது சொற்றிரிபானகொடுந்தமிழாம்.

'என்னது ஆகின்றது?' என்பதை எந்தாணுஎன்றும், 'நான் செய்யவேண்டும்’ என்பதை 'ஞான்செய்யேணம்' என்றும் மலை யாளத்தில் திரிப்பதுசொற்றொடர்த் திரிபான கொடுந்தமிழாம்.

விடைசொல்லுதல் என்னும் சிறப்புப்பொருளுள்ள செப்புதற் சொல்லைச் சொல்லுதல்என்னும் பொதுப் பொருளில் தெலுங்கில்திரிப்பதும், ஆய்ந்து பார்த்தல் என்னும்சிறப்புப் பொருளுள்ள நோடுதற் சொல்லைப்பார்த்தல் என்னும் பொதுப் பொருளிற்கன்னடத்தில் திரிப்பதும், புதுப்பெருக்கு நீர்என்னும் சிறப்புப் பொருளுள்ள வெள்ளம் என்னும்சொல்லை நீர் என்னும் பொதுப் பொருளில்மலையாளத்தில் திரிப்பதும், பொருட்டிரிபானகொடுந்தமிழாம்.

இக்காலத்துப் பேராசிரியர் சிலர்உலக வழக்கிற்கும் கொச்சை வழக்கிற்கும்வேறுபாடறியாது, வச்சிருக்கோம்(வைத்திருக்கிறோம்) என்பதை உலகவழக்காகக்கொள்வர்.

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்." 

(தொல்.1589)

"வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான" 

(தொல்.1592)

என்பவற்றைக் கண்டும் அவர்உணர்வதில்லை. பொதுமக்களுள் ஒரு சாராரானகீழ்மக்கள் பேச்சையுந் தழுவவேண்டு மெனின், அவர்ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டியதாகும். இதுஉயர்ந்தோர்க் குடம் பாடன்று. செய்யுள்வழக்கிற்கும் உலக வழக்கிற்கும் சிறிதுவேறுபாடிருப்பினும், இரண்டும் செந்தமிழ்வழக்கேயென்றும், செம்மை தமிழின் உயிர்நாடிப்பண்பென்றும், தமிழுக்கு வழுநிலை யானவை திரவிடமொழிகட்கு வழாநிலை யாகுமென்றும், அத னாலேயே அவைதனிமொழிகளாக வழங்குகின்றனவென்றும் அறிதல்வேண்டும். 

மரபு

"எப்பொருள் எச்சொலின் எவ்வாறுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே."  

(நன்.388)