பகடு,புழைக்கை-பூட்கை, பெருமா, பொங்கடி, மதமா, மறமலி,மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலியன. முகத்திற் செம்புள்ளி யுள்ளதுசிந்துரம் அல்லது புகர்முகம். முருகன் ஊர்திபிணிமுகம். ஆண்யானை களிறு; பெண்யானை பிடி. அயல்நாட்டினின்று வந்தகுதிரையினத்தையும், பத்திற்கும் மேற்பட்டவகையாகப் பிரித்தமை முன்னர்க் கூறப்பட்டது. தமிழ்மொழி, தனக்குரிய வீடு என்னுஞ்சொல்லை மட்டுமன்றி, இல் என்னுந் தெலுங்குச்சொல்லையும், மனை யென்னும் கன்னடச் சொல்லையும்,சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish)மொழிகட்கும் பொதுவான குடி என்னுஞ் சொல்லையும்,தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார்தமிழ்ச்சொல் வளத்தைப் பாராட்டிக்கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. கொடை வேண்டற் சொற்கள்: "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே" | (தொல். 928) | "தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே." | (தொல். 929) | "கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே." | (தொல்.930) |
ஒன்றைச் சொல்லும்வகையைப்பற்றிமட்டும் முப்பதிற்கு மேற்பட்டவினைச்சொற்கள் உள. 'தமிழ் வரலாறு'பார்க்க. குமரிநாட்டுத் தமிழ் ஓரிலக்கம்சொற்களைக் கொண்டிருந்தது. அந்நாட்டுமுழுக்கினாலும், முதலிரு கழக விலக்கிய அழிவினாலும்,பாதிச் சொற்கள் இறந்துபட்டன. செம்மை எழுத்துகளையும் சொற்களையும்சொற்றொடர்களையும், ஒலியும் பொருளும்திரிக்காதும் சிதைக்காதும் இலக்கண நெறியிற்பேசுவது செம்மை. செம்மை தவறியது கொடுமை.செம்மையான தமிழ் செந்தமிழ். கொடுமையான தமிழ்கொடுந்தமிழ். தமிழை என்றுஞ் செந்தமிழாகவேவழங்கவேண்டு மென்பது, தொன்னூ லாசிரியர் இட்டநிலையான வரம்பு. அவ் வரம்பினாலேயே, கடந்தமூவாயிரம் ஆண்டாக ஆரியர் எத்துணையோ கேடுசெய்திருப் பினும், தமிழ் இன்னும் அழியாதுஇருந்துவருகின்றது. தெலுங்கில் னகர வீற்றை டகரவீறாகவும், கன்னடத்திற் பகர முதலை ஹகரமுதலாகவும், மலையாளத்தில் மெலியடுத்த வல்லெழுத்தையும் மெலியாகவும் வடார்க்காட்டு ஆம்பூர்வட்டத்தில் ழகரத்தை யகரமாகவும் ஒலிப்பதுஒலித்திரிபான கொடுந்தமிழாம்.
|