சப்புதல் - ஒன்றை மெல்லாது நாவிற்கும்அண்ணத்திற்கும் இடையிலிட்டு நெருக்கி, அதன்சாற்றை மெல்ல மெல்ல உறிஞ்சுதல்; அல்லது அப்பொருளைச் சிறிது சிறிதாகக் கரைத்தல். சுவைத்தல் - ஒன்றை மென்று அதன் சுவையைநுகர்தல். சவைத்தல் - மெல்லிய பொருளைமெல்லுதல், குழந்தை தாய்ப்பாலைச் சப்புதல். சூம்புதல் - தித்திப்புக் குச்சும்மூளையெலும்பும் விரலும் சூப்புதல் போன்றவற்றைவாயிலிட்டுச் சப்புதல். தின்னுதல் - பழமும் பலகாரமும் போன்றசிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல். உண்ணுதல் - கவளங் கவளமாகச் சோற்றைஉட்கொள்ளல். சாப்பிடுதல் - குழம்பும் சாறும் மோரும்(அல்லது அவற்றுள் ஒன்று) கலந்த சோற்றைக் கவளங்கவளமாகக் கறிவகைகளுடன் (அல்லது அவையின்றி)உட்கொள்ளுதல். மடுத்தல், - கம்பங்கஞ்சியும் கேழ்வரகுகூழும் போன்ற வாய்மடுத்தல் வற்றைக்கட்டிகட்டியாகக் கூட்டில் தொட்டுண்ணுதல், கவளங் கவளமாகப்பிறர்ஊட்டுதல். அசைத்தல், - விலங்கு அசையிடுவதுபோல்அலகை யசைத்து அசைவுசெய்தல் மென்றுஉட்கொள்ளுதல். அயிலுதல் - குழந்தை அளைந்துசோறுண்ணுதல். அயில்-அயின்-அயினி = உணவு. "தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே" | (புறம்.77) |
அள்ளல் = நெருக்கம், குழைந்த சேறு. அள்-(அய்)-அயில். அளிதல் =கலத்தல்,குழைதல். அள்-அளாவு. அள்-அளை. "சிறுகை யளாவிய கூழ்" | (குறள். 64) | "..................................இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்." | (நள.கலிதொ.68) |
|