சொல் சொற்களை முதனிலை, ஈறு, புணர்ச்சி,சாரியை, இடைநிலை, திரிபு என்னும் ஆறுறுப்பாகப்பகுத்தும்; இயற்சொல், திரிசொல், திசைச்சொல்என மூவகையாக வகுத்தும் மொழிநூற்கு அடிகோலியது தமிழே. பொருள் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்தமையால், சொல்லிலக்கணத்தை யடுத்துச் சொற்றொட ரிலக்கணத்தைக் கூறாவிடினும்,செய்யுளிலக்கணத்தைக் கூறி அதன்பின் பொருளிலக்கணத்தைக் கூறியிருக்கலாம். ஆயின்,முதனூலாசிரியர் மெய்ப்பொருளறிஞராயிருந்ததனால், மொழிநடை எதுவாயினும் பொருளேஅதன் உள்ளீடென்றும், தனிச்சொற்கும் பொருளுண்டென்றும் கண்டு, அதனையே சொல்லிற்கடுத்துக்கூறியதோடு, அதற்கே சிறப்புக் கொடுத்துச்செய்யுளை அதனுள்ளடக்கி, மூன்றாம் அதிகாரத்தைப்பொருளதிகாரமெனப் பெயரிட்டு இயற்றமிழ் இலக்கணநூலின் முடிமணியாக்கினார். திருக்கோவிலின்முகமண்டபமும் இடைமண்டபமும் உண்ணாழிகையும் போல,எழுத்தும் சொல்லும் பொருளும் முறையே ஒன்றனொன்றுசிறந்தன வாகும். பிற்காலத்துப் பாண்டியனொருவன்,எழுத்ததிகாரமும் சொல்ல திகாரமும்வல்லாரைமட்டும் தலைப்பட்டுப் பொருளதிகாரம்வல்லாரைத் தலைப்படாதபோது, புடைபடக் கவன்று,"என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வதுபொருளதிகாரத்தின் பொருட்டன்றே!பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும்பெற்றிலேம்" என்று வருந்தியதாக, இறையனாரகப்பொருளுரை கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது. இதனால், தமிழன் பெருமையையும் தமிழின்பெருமையையும் ஒருங்கே உணரலாம். ஏனை மொழியிலக்கண நூலாரெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணிஎன்னும் நாலொடு நின்றுவிட, தமிழிலக்கண நூலார்மட்டும் யாப்பின் பொருளுக்கும் இலக்கணம்வகுத்தது, குமரிநாட்டுத் தமிழரின் ஒப்புயர்வற்றஅகக்கரண வளர்ச்சியைக் காட்டும்.பொருளிலக்கணம் போலப் பண்டைத் தமிழனின் புலமைநுணுக்கத்தைக் காட்டும் சான்று வேறெதுவுமில்லை. எல்லாப் பொருள்களையும் அகம், புறம்என இரண்டாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் எவ்வேழுதிணையாக வகுத்திருக்கின்றார் முதனூலார்.
|