பக்கம் எண் :

இயனிலைப் படலம்105

சொல் பொதுப்பொருள்

சிறப்புப்பொருள்

அடியார் பேறு(காலம்)
நெய்
மலர்(அடி)
பல்வேறு அடியார்
பல்வகைப்பேறு
பல்வகை நெய்
பல்வேறு மலர்
இறைவனடியார்
மக்கட்பேறு
ஆவின் நெய்
தாமரைமலர்

மக்கட்பேறு இல்லற வாழ்க்கையிற் சிறந்த பேறாகக் கருதப் பட்டமை,

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற" (குறள். 61)

என்னுந் திருக்குறளா லறிக. பெற்றோர் = சிறந்த பேறுபெற்ற தாய் தந்தையர்.

புலாலுண்பார் கறி என்னும் சொல்லாற் புலாலைக் குறித்தலும் சிறப்பிக்கையே.

(5) பொதுப்பிக்கை (Generalisation)

சிறப்புப் பொருட்சொல்லைப் பொதுப்பொருளில் ஆள்வது பொதுப்பிக்கையாம். இது சிறப்பிக்கையின் மறுதலை.

சொல் சிறப்புப்பெயர் பொதுப்பொருள்
எலி
தாமரை
தூங்குதல்

வெள்ளெலி
செந்தாமரை
தொங்குகட்டிலில்
அல்லது தொட்டிலில்
உறங்குதல்
எலி
தாமரை
உறங்குதல்

பொருட்பெருக்கமும் பொருளிழப்பும்

ஒரு கருத்தினின்று வேறொரு கருத்துத் தோன்றுவதால், பொதுவாகச் சொற்களின் பொருள்கள் இரண்டும் பலவுமாகப் பெருகுவதுண்டு. ஏதேனுமொரு சிறப்புப்பொருள் குறித்த அடைபெற்ற சொல்லைப் பொதுப்பொருளில் வழங்கின், அச் சிறப்புப் பொருளடை தன் பொருளை இழந்துவிடும்.

எ-டு:

பொருட்பெருக்கம்:

காளை = எருது, மறவோன்.
திரு = செல்வம், அழகு, தெய்வத்தன்மை.