எ-டு: வள்-வய்-வயிர்-வயிரம்-வைரம்.
ஓரிரு சொன்முதலில் வரும் அகர உகரம்
ஒளகாரமாகவும் எழுதப்பெறும்.
எ-டு: கதுவாலி (= குறுகிய வாலையுடைய
பறவையினம்)- கவுதாரி
(இலக்கணப்போலி)-கௌதாரி.
இனி, அகரத்தையடுத்த யகரமெய்யும்
எல்லாவிடத்தும் ஐகார மாகவே எழுதப்பெறும்.
"அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத்
தோன்றும்." (தொல்.
56)
எ-டு: வள் (=கூர்மை)-(வய்)-வை = கூர்மை.
ளகர மெய் யகர மெய்யாகத் திரிவது
பெருவழக்கு.
எ-டு: கொள்-கோள்-கோய்,
தொள்-தொய், நொள்- நொய்,
பிள்-பிய், மாள்-மாய், வெள்-வெய்- வெய்யோன் =
விரும்புகின்றோன். வெய்-
வெய்ம்மை-வெம்மை=விருப்பம்.
"வெம்மை வேண்டல்." (தொல். உரி. 36)
யகர மெய்யீற்று ஒகர முதற்சொல்
ஈரெழுத்துச் சொல்லா யிருந்து அகர முதலாய் மாறின்,
ஐகார வடிவு பெறும்.
எ-டு: பொள்-பொய்
(உட்டுளை)-(பய்)-பை,
அகரத்தை யடுத்த வகரமெய், ஒரு சில
சொற்களில் ஒளகார மாகவும் எழுதப்பெறும்.
எ-டு: அவ்வியம்-ஒளவியம்,
கவ்வு-கௌவு, வவ்வால் - வௌவால்
ஒளவை என்னும் சொல் அவ்வை என்பதன்
திரிபேயா யினும், ஒரு புலத்தியாரின்
இயற்பெயராதலின், ஒளகார முதலதாகவே எழுதப்படல்
வேண்டும்.
அம்மை-அவ்வை-ஒளவை.
அவ், அவ்வாறு, சவ்வு, தவ்வு முதலிய சில
சொற்களில், அகரமடுத்த வகரமெய் ஒளகாரவீறாக
எழுதப்படுவதே யில்லை. ஆயின், அய் என்னும் வடிவம்
"அய்" என்னும் அசையைக் குறித்தாலன்றி,
எழுத்துத்தமிழில் நிகழ்தற்கு இடமேயில்லை. இதை
நோக்கிப்போலும்,
|