மண்+யானை = மண்ணியானை
வேள்+யாவன் =
வேளியாவன்
இவ்வகைப் புணர்ச்சி
எல்லார்க்கும் உடன்பாடன்று.
குற்றியலுகரம்
தனிநெடிற்கும் இரு அல்லது
பலவெழுத்திற்கும் பின், வல்லின மெய்யோடு கூடிச்
சொல்லீறாய் வரும் உகரம், இதழ் குவியாது,
இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டு, அரை
மாத்திரையாய்க் குறுகியொலிக்கும் அது
குற்றியலுகரம்.
எ-டு: மாடு,
செக்கு, பருப்பு, பிண்ணாக்கு, வந்ததற்கு.
ஆய்தம்
தனிச்சொல்லிலும்
புணர்ச்சொல்லிலும், குறிலுக்கும் வல்லின
உயிர்மெய்க்கும் இடையில், நுண்ணிய ககரமாக
ஒலித்து நிற்கும் எழுத்து ஆய்தமாம்.
ஆய்தல்-நுணுகுதல்.
"ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்தல்
ஆவயின் நான்கும் உள்ளதன்
நுணுக்கம்" (தொல்.
813)
என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.
ஆய்தம் பின்வருமாறு நால்வகையில்
தோன்றும்.
(i) புணர்ச்சித் திரிபு
சொல்லுறுப்புப்
புணர்ச்சி:
எ-டு
:
அல்+கு = அல்கு-அஃகு
வெள்+கு = வெஃகு
அல்குதல் = சுருங்குதல். வெள்குதல் =
விரும்புதல். வெள்-வெண்டு(ஆசைப்படு).
வெள்-வெய்-வெய்யோன் = விரும்பியோன்.
சொற்புணர்ச்சி:
எ-டு
:
பல்+துளி = பஃறுளி
கல்+தீது = கற்றீது,
கஃறீது
முள்+தீது = முட்டீது, முஃடீது
அவ்+கடிய = அஃகடிய
(ii) தனிச்சொல் திரிப்பு
எ-டு
:
அத்து-அஃது, பத்து-பஃது
பகுதி-பஃதி
|