பக்கம் எண் :

இயனிலைப் படலம்133

தெரியாத அருஞ்சொற்களைத் தொகுத்துப் பொருள் உரைத்துக் கொண்டனர். இதன் விளக்கம் பின்னர்க் காண்க.

(1) பெயர்ச்சொல்

ஒரு பொருளின் பெயரே பெயர்ச்சொல். பெய்வது பெயர்; பெய்தல் - இடுதல். பெயரிடுதல் என்னும் வழக்கை நோக்குக.

பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுபொருள்பற்றி, அறுவகைப்படும்; இருதிணைபற்றி, உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை என மூவகைப்படும்; மூவிடம் பற்றி, தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும். சினை = உறுப்பு.

இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுத்திணைப் பெயர் அல்லது விரவுப்பெயர் எனப்படும்.

எ-டு: ஆண், பெண், தாய், பிள்ளை.

தன்மை முன்னிலைப்பெயர்கள், எண்பற்றி ஒருமை பன்மை என இருவகைப்படும். படர்க்கைப் பெயர்கள், பால்பற்றி ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐவகைப்படும்.

1. மூவிடப் பகரப்பெயர் (Personal Pronouns)

தன்மைப்பெயர்: ஒருமை பன்மை இரட்டைப்பன்மை

முதல்நிலை
2ஆம் நிலை
3ஆம் நிலை

ஏன்
யான்
நான்
ஏம்
யாம்
நாம்
ஏங்கள்
யாங்கள்
நாங்கள்

தன்மைப் பெயரின் வேற்றுமை யடிகள்

ஏன்
யான் - என்
நான்-நன்
ஏம்
யாம் -எம்
நாம்-நம்
ஏங்கள்
யாங்கள்-எங்கள்
நாங்கள்-நங்கள்

யாங்கள் என்னும் தனித்தன்மைப் பன்மைப் பெயர் வழக்கற்றுப் போனதினால், இன்று அதன் இடத்தில் நாங்கள் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப்பெயர் தன் உளப்பாட்டுப் பொருளையிழந்து வழங்குகின்றது.

ஏ என்பது உயர்ச்சி குறித்தலால், இயல்பாக மாந்தனுக்குள்ள நான் என்னும் செருக்கு அல்லது தன்னலம்பற்றி, அதை அடியாகக்