|
2. அகரவீற்று வினையெச்சத்துடன் படும் என்னும்
துணை
வினை சேர்தல்.
எ-டு:
"நாச்செற்று விக்குள்மேல்
வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்
படும்." (குறள்.
335)
(4) கடமைவினை
எ-டு:
பெற்றோர் பிள்ளைகளை
வளர்க்கவும், பிள்ளை கள் பெரியோரானபின்
பெற்றோரைப் பேணவுங் கடவர்.
(5) கற்பனைவினை
இறைவன் மக்களுக்கு இட்ட கட்டளையை
அல்லது கட்டளையாகக் கூறுவது கற்பனை வினை. இது
முன்னிலை எதிர்கால வினைமுற்றொடு ஆக என்னும்
துணைவினை சேர்ந்துவரும்.
எ-டு:
உன்னைப்போற் பிறனை நேசிப்பாயாக.
களவு செய்யா திருப்பாயாக.
(6) சூளுறவுவினை
இது இருவகையில் வரும்.
1. தன்மை யெதிர்கால
வினைமுற்றொடு (வியங்கோள் வடிவிலுள்ள) ஆக என்னும்
துணைவினை சேர்தல்.
எ-டு:
நான் இவளைக் கைவிடின், அன்னையைக்
கொன்றான் அடையும் உலகை அடைவேனாக.
2. வியங்கோள் வினை.
எ-டு:
"அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக." (புறம். 71)
(7) செயவிடல் வினை
படர்க்கையானை ஒன்று செய்யவிடுமாறு
முன்னிலையானை ஏவுவது செயவிடல் வினையாம். இதை
இசைவிப்பு வினை என்றும்
|