எ-டு:
எழுதிக்கொள்,முகம்வழித்துக்கொண்டான்
தற்பொருட்டு வினை.
எழுதிக்கொடு,
கற்றுக்கொடுத்தான்-மற்பொருட்டுவினை.
இனி, ஒன்றிற்கொன்று எதிரான
இணையன்றித் தனித்தனி வெவ்வேறு பொருள்பற்றி
வரும் பல வினைகளுமுள. அவையாவன:
(1) வாழ்த்துவினை (Optative
Mood)
ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஓர்
அமைப்பை, நீடுநிற்குமாறு அல்லது தழைத்தோங்குமாறு
வாழ்த்துவது வாழ்த்து வினையாம். இது
தன்மையிடத்தில் வராது.
எ-டு:
"வரையாது கொடுத்தோய்......நடுக்கின்றி
நிலியர்!" (புறம்.2)
"தென்னவன் வாழி!" (சிலப். 11 : 22)
"வரப்புயர!" (ஒளவையார்)
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!
(2) கட்டாயவினை
நிகழ்கால வினையெச்சம் என்னும்
அகரவீற்று வினை யெச்சத்தோடு, வேண்டும் என்னும்
துணைவினை சேரின் கட்டாய வினையாம்.
எ-டு:
தேர்விற்குப் பணங்
கட்டவேண்டும்.
(3) தேவைவினை
இது இருவகையில் அமையும்.
1. அகரவீற்று வினையெச்சத்துடன் அல்லது
அல்லீற்று (அல்லது தல்லீற்று)த் தொழிற்பெயருடன்
வேண்டும் என்னும் துணைவினை சேர்தல்.
எ-டு:
கூழானாலுங் குளித்துக் குடிக்கவேண்டும்.
நுண்ணிய கருமமும் எண்ணிச்செய்தல்வேண்டும்.
ஒரு நாளைக்கு
ஒருவேளையாகிலும் உண்ணல் வேண்டும்.
|