பட்டினம் = பிள்ளையார் =
பட்டினத்துப்பிள்ளையார்
நகரம்+ஆன் = நகரத்தான்
இவை தோன்றலும்
கெடுதலும்.
வேம்பு+காய் =
வேப்பங்காய்
பனை+தோப்பு =
பனந்தோப்பு
இவை தோன்றலும்
திரிதலும் கெடுதலும்.
மரூஉப் புணர்ச்சி
சில சொற்கள் ஒலிநெறிப்படி
ஒழுங்காய்ப் புணராது மருவிப் புணரும். அப் புணர்ச்சி
மரூஉப் புணர்ச்சியாம். மருவுதல், நெறி திறம்புதல்.
எ-டு: ஆதன்+தா = (ஆந்தா)-ஆந்தை
அகம்+கை = அங்கை.
நாழி+உரி = நாழுரி-நாடுரி
மக+கள் = மக்கள்
உள்ளங்கை (உள்+அங்கை) என்பது
அங்கையின் நடுப்பகுதி. இதில் அம் என்பது
சாரியையன்று.
எந்தை, தந்தை என்பன மரூஉப்
புணர்ச்சியல்ல. இவை எம்+தா, தம்+தா எனப்
பிரியும். தா என்பது தந்தையைக் குறிக்கும்
பெயர்ச் சொல்.
தா+தா = தாதா-தாதை (தந்தையின்
தந்தை)-இயல்புப்புணர்ச்சி
தா+தா = தாத்தா (தந்தையின்
தந்தை)-திரிபுப்புணர்ச்சி
தாதை என்பதிற் போன்றே, எந்தை,
தந்தை, ஆந்தை, பூந்தை என்பவற்றிலும் தை என்பது தா
என்பதன் திரிபாகும்.
ஒ.நோ:
|
எம்பி(ன்)
நும்பி(ன்)
தம்பி(ன்) |
எங்கை
நுங்கை
தங்கை |
எவ்வை
நுவ்வை
தவ்வை
|
எம்முன்
நும்முன்
தம்முன்
|
எந்தை
நுந்தை
தந்தை |
எம்பின் = எமக்குப் பின் பிறந்தான்.
கை = தங்கை (பிங்.). எங்கை = எமக்குச் சிறியவள்.
எம் + அவ்வை = எவ்வை. இதில் அவ்வை என்னும்
அன்னையின் பெயர் அன்னை போலும் அக்கையைக்
குறித்தது. இச் சொல் சில பழஞ்செய்யுள்களில்
தங்கையைக் குறிப்பது, காதல் பற்றிய மரபு
வழுவமைதியென அறிக. என் தந்தை, என் தம்பி, என்
தங்கை என்பனவெல்லாம் வழக்குப் பற்றிய
இடவழுவமைதியே.
|