பக்கம் எண் :

108தமிழ் வரலாறு

12. கடைக்கழகத்தின்பின் தமிழ் சிதைந்த வகைகள்

i. மொழிச் சிதைவு

(1) வேண்டா வடசொற் கலப்பு.

(2) சேரநாட்டுத் தமிழ் படிப்படியாய்த் திரிந்து வேறு மொழியாய்ப் பிரிந்து போனமை.

(3) தமிழ் தலைமையிழந்து ஒரு கிளைமொழிபோற் கருதப்பட்டமை.

(4) தமிழ் கோயில் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப் பட்டமை.

(5) தமிழ் தமிழராலும் தாழ்த்தவும் வெறுக்கவும்பட்டமை. இன்று பெரும்பாலார் தமிழ்ப்பெயரை விரும்பாமையும், சோறு என்று சொல்ல நாணுதலும் காண்க.

(6) தமிழர்க்குத் தாய்மொழி யுணர்ச்சி அற்றமை.

(7) நீண்டகாலமாகத் தமிழுக்கு மேல்வளர்ச்சியின்மை.

(8) வடசொற் கலந்த தமிழ்க் கல்வெட்டும் தனி வடமொழிக் கல்வெட்டும் தோன்றியமை.

(9) தமிழ் உரைநடை மணிப்பவழ நடையாக மாறியமை.

(10) பல்வகை வழுக்களும் மலிந்த தமிழ்நடை

கல்வெட்டுகளிலும் ஆவணங்களிலும் ஆளப்பெற்றமை.

ii. கலைச்சிதைவு

இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய தமிழ்க் கலை களின் சிறந்த முறைகள் அழியுண்டுபோயின.

iii. நூலழிவு

முக்கழகத்திற்கும் முந்திய நூல்களும், முதலிரு கழகநூல் களும் கடைக்கழக நூல்களிற் பெரும்பாலனவும் இறந்துபட்டன. இவை பல்லாயிரக்கணக்கின.

"ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலமும் லோகம்
மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள."

கணக்கற்ற தமிழ்நூல்கள் கற்பாரும் காப்பாருமின்றி, காவிரிப் பதினெட்டாம் பெருக்கில் கடந்த ஆயிரம் ஆண்டுக்காலமாக, ஆண்டு தோறும் எறியப்பட்டு வந்திருக்கின்றன.

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர் தொகுத்துவைத்திருந்த ஆயிரக்கணக்கான