பக்கம் எண் :

26தமிழ் வரலாறு

இ. இது ஆண்பாலொழிந்த மூவிட வொருமைப்பால்களில் வரும்.

எ-டு: தடங்கண்ணி, நீர்முள்ளி

(3) இல்லானீறுகள்

இலி, அறை. இவை மூவிட வொருமைப்பாலிலும் எண்ணி லும்வரும்.

எ-டு: அறிவிலி=அறிவில்லாத நான், நீ.
அறிவில்லாதவன்-வள்-து.
காதறை=காதில்லாத நான், நீ.
காதில்லாதவன்-வள்-து.

(4) கொண்டானீறு

கொள்ளி கொளி. இவை மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம்.

எ-டு: பித்துக்கொளி=பித்துக்கொண்ட நான், நீ.

பித்துக்கொண்டவன்-வள்-து.

அடைகொளி=அடைகொண்டது.

(5) செயப்படுபொருள் ஈறு

அம்-ம். எ-டு:தொல்காப்பியன் தொல்காப்பியம் = தொல் காப்பியனால் இயற்றப்பட்டது.

சேனாவரையன்-சேனாவரையம்=சேனாவரையனால் உரைக்கப் பெற்றது.

(6) இடப்பெயர் மரூஉ ஈறுகள்

எ-டு: அந்தை-உறந்தை, கரந்தை, களந்தை, குடந்தை.

ஐ - அளகை, உஞ்சை, தஞ்சை, தருமை, கருவை, மழவை, முகவை, நெல்லை, ஆறை, சென்னை.

சை - இளசை, துறைசை, பனசை.

வை - கோவை, புதுவை.

காஞ்சி-திருச்சி முதலியவை ஈறு கருதாத குறுக்கங்கள்.

(4) வேற்றுமை யுருபுகள்

மொழி பொதுமக்கள் அமைப்பாதலின், அதன் இன்றியமை யாத கூறுகளான வேற்றுமையுருபுகளும் அவர்கள் அமைத்தனவே. வேற்றுமைகளை ஏழென்றும் எட்டென்றும் வரையறுத்தும்,