|
(4) ஈறுபெறுதல்
ஈ-வீ-வி-பி.
செய்ய+ஈ = செய்யவீ-செய்வீ-செய்வி.
நடப்ப+ஈ = நடப்பவீ-நடப்பீ-நடப்பி.
செய்யவீத்தான் =
செய்யவுதவினான், செய்யவிட்டான், செய்யச்
செய்தான்.
"ஈத்துவக்கும் இன்பம்" (குறள். 228)
"எமக்கீத் தனையே" (புறம். 911)
என ஈதல்வினை வலித்தும் இறந்தகாலங்
காட்டுதல் காண்க.
வி, பி, பிறவினை யீறுகளானபின்,
வினைகள் அவற்றை ஏற்ற பெற்றி ஒன்றும் பலவும்
ஏற்றன.
செய்விப்பி, நடத்துவி-இருமடிப்
பிறவினை.
செய்விப்பிப்பி,நடத்து
விப்ப-மும்மடிப் பிறவினை.
இவை செய்விப்பித்தான்,
செய்விப்பிப்பித்தான் என நிகழ்ச்சி
வினையாம். எல்லா வினைகளும் முதனிலையளவில்
ஏவல்வடிவா யிருத்தலின், பிறவினை முதனிலைகளை
ஏவல்வினையென்று விதந்துகூற வேண்டியதில்லை.
ஒத்து-அத்து-து. ஒத்து-ஒட்டு-அட்டு.
ஒத்துதல்=பொருந்துதல், ஒற்றுதல், இசைதல்.
ஒ-அ. ஒ-நோ; கொம்பு-கம்பு.
மொண்டை-மண்டை, மொத்திகை - மத்திகை.
வாழ+அத்து = (வாழத்து)-வாழ்த்து-வழுத்து.
தாழ+அத்து = (தாழத்து)-தாழ்த்து.
ஒட்டு-அட்டு. வர+அட்டு = வரட்டு.
அத்து என்னும் துணைவினை துவ்வீறாகக்
குறைந்தபின், அதன் திரிபாகக் சு டு று ஈறுகள்
தோன்றின.
எ-டு: பாய்+து
= பாய்த்து-பாய்ச்சு.
நீள்+து = நீட்டு, காண்+து = காட்டு.
நால்+து = நாற்று, தின்+து =
தீற்று.
ஒருசில வினைகள் உவுஈறு பெற்றுப்
பிறவினையாகின்றன.
எ-டு: எழு-எழுவு, கொள்-கொளுவு.
எழுவுதல்=எழச்செய்தல்,
ஓசையெழுப்புதல்.
கொளுவுதல்= கொள்ளச் செய்தல்.
|