பக்கம் எண் :

56தமிழ் வரலாறு

"வேந்த னும்மே............புறம்பெற் றிசினே,"

"பாடினி யும்மே............இழைபெற் றிசினே,"

"பாண்மக னும்மே..........பூப்பெற் றிசினே." (புறம். 11)

எனப் படர்க்கை வினைமுற்றுகளையும், எண்ணீறும் பாலீறும் அற்றனவாக அமைத்துவிட்டனர். இது பெரிதும் மயக்கத்தை விளைத்துவிட்டது. அதனால், தொல்காப்பியர்க்குப் பதினெண் நூற்றாண்டு பிந்திய பவணந்தியாரும்,

".............சின்...........அசைமொழி." (நன். 441)

என மயங்கிவிட்டனர்.

சின் என்பது அசைநிலையாயின், அது நீங்கியபின், நுவன்றி சினே என்னும் தன்மையொருமை வினைமுற்று நுவன்றியே என்றும்; புறம்பெற் றிசினே என்னும் படர்க்கை ஆண்பால் வினைமுற்றும் "அறிந்திசினோரே" (தொல். 643) என்னும் படர்க்கைப் பலர்பால் வினைமுற்றும், முறையே, புறம்பெற்றியே, அறிந்தியோரே என்றும் நிற்கும். அவை ஆசிரியர் குறித்த சொல்லாகாமை கண்டுகொள்க.

தன்மையொருமை :
முன்னிலையொருமை :
படர்க்கையொருமை :
.
ஈயினேன்-ஈசினேன்-இசினேன்
ஈயினை-ஈசினை-இசினை ஈயினன்-ஈசினன்-இசினன்
ஈயினள்-ஈசினள்-இசினள்

(4) உரிச்சொல்

உரிச்சொல் என்பது இலக்கணவகைச் சொல் அன்றென் பதும், அது ஆரியர்க்கு விளங்குமாறு பொருள்கூறப்பட்ட சொற்களும் சொல் வடிவுகளுமாகிய அருஞ்சொற்றொகுதியே என்பதும் முன்னர்க் கூறப்பட்டன. அவற்றை,

"உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
..............................................................
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
...................................................................

பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்" (782)

என்னும் தொல்காப்பிய உரிச்சொல் இயல்விளக்க நூற்பாவும், தொல்காப்பியர் உரிச்சொற்கட்கு அகரமுதலி முறையிற் பொருளே கூறிச் செல்வதும், உரிச்சொற்குத் தனியிலக்கணவகைத் தன்மை யின்மையும்,