உ-இ-எ-ஏ-ஏண்-யாண்-யாணம்-யாணர்
உ-உல்-உள்-சுள்-சுண்-சுண்ணம்-சுண்ணம்பு- சுண்ணாம்பு
உ-உல்-முல்-மல்-மன-மன்று-மந்து-மந்தை
2. தொழிற்பெயர் முதனிலையாதல்
நகு-நகை (தொ. பெ.)-நகைப்பு
கள்-களி (தொ.
பெ.)-களிப்பு
வள்-வளை (தொ. பெ.)-வளைவு
குள்-கொள்-கொளும்-(தொ. பெ.)-கொளுமு- கொளுமூ-கொண்மூ
3. இயலொலிச்சொல் திரியொலிச்சொற் பொருள்
தரல்
பள்-பண்டு. பள்-பழ-பழமை
அர்-அரங்கு. அர்-அறு-அறை
4. இயற்சொல் திரிசொற்பொருள் தரல்
தில்-திள்-திண்-திண்ணை.
திள்-திர்-திரள்-திரளை- திரணை
வல்-வள்-வண்-வண்ணம்-வண்ணகம்.
வள்-வர்-வரி- வரணம்.
வளைத்தல் =
வளைத்தெழுதல், எழுதுதல்.
"உருவப் பல்பூ வொருகொடி வளைஇ" (நெடுநல். 113)
வரி = வளைகோடு, எழுத்து.
வரிதல் = 1. எழுதுதல் (பிங்.) 2.
சித்திரமெழுதுதல்.
"வல்லோன் றைஇய வரிவனப் புற்ற,
வல்லிப்பாவை"
(புறம்.33)
வரித்தல் = 1. எழுதுதல்.
"வள்ளுகிர் வரித்த சாந்தின்
வனமுலை" (சீவக
. 2532)
2. சித்திரமெழுதுதல்.
திரணை என்னும் சொற்பொருளைத்
திண்ணை என்னும் சொல்லே குறித்தல்போல், வரணம்
என்னும் சொற்பொருளை வண்ணம் என்னும் சொல்லே
குறிக்கும் என அறிக.
வள்ளுதல்=வளைதல், வளைத்தெழுதுதல்.
5. வினைவளர்ச்சி
செய்-செய்கின்று-செய்கின்றான்-செய்கின்றனன்.
|