26 மதிப்புரை மாலை | கொய்யாக்கனி | (பெருஞ்சித்திரனார்) | .....அஞ்சற் கணக்கரும், என் பழைய மாணவருமான துரை மாணிக்கனார் இயற்றியுள்ள 'கொய்யாக்கனி' என்னும் பனுவலைப் பார்வையிட்டேன். வெண்பாவும், அகவலும், ஆசிரிய மண்டிலமும் (விருத்தமும்) இசைப்பாட்டும், ஆகிய நான்மணிகளை விரவிக் கோத்த கோவைபோலும், இப் பனுவலுள் வருஞ் செய்யுட்களெல்லாம், நவின் றோர்க் கினிமையும், கேட்டோர்க் கின்பமும் பயக்குமளவு சொற்சுவை பொருட்சுவை செறிந்து, ஆற்றொழுக்கான ஒழுகிசை நடையில் இயன்று, எல்லார்க்கும் பொருள் விளங்குமாறு முந்திரிப் பதமான செம்பாகமாய் அமைந்துள்ளன. அழகும் ஒளியும் அமைந்து பட்டை தீர்த்த மணி களூடு அவற்றை இணைத்துச்செல்லும் மாற்றுயர்ந்த பொற்கம்பி போல், இப் பாவினங்களூடு தொடர்ந்து செல்லும் கதையும் சிறந்ததொன்றாய் இரா நின்றது. | | கதைச் சிறப்பு. உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தல், உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தல், இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தல். | என்னும் நால்வகைக் கதையுள் எதுவாயினும், மக்கள் வாழ்க்கை பற்றிய தாயின், இன்பந்தருதல், உலகொடு பொருந்தல், விழுமியது பயத்தல் என்னும் மூவியல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும், அல்லாக்கால் கதை சிறவாது. | மதத்துறையில் மடம்பட்ட பண்டைக் காலத்தில் உலகியற் கொவ் வாத பல தேவியற் கதைக்கூறுகள் ஒரு பயனோக்கிச் சிறந்தனவாகக் கொள்ளப்பட்டன வேனும், பகுத்தறிவியக்கம் பரவிவரும் இக் காலத் திற்கு அவை எள்ளளவும் ஏற்கா. கொய்யாக்கனி என்னும் இப் பனுவல் தழீஇய கதை, இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலே யாயினும், உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தல் போல் உலகியற் பொருத் தம் உடையது; படிப்போர்க்கும், கேட்போர்க்கும் இன்பம் பயப்பது; பல சிறந்த உண்மைகளை எடுத்துக்காட்டி அறவொழுக்கத்தை | | |
|
|