பக்கம் எண் :

மதிப்புரை மாலை127

என்பதையே சிறப்பாகக் கூறி, அதை விளக்கும் முகமாகப் பல செய்யுட் சொற்களைத் தனித்தனி நிறுத்தி, அகரமுதலி (அகராதி) முறையிற் பொருள் கூறிச் செல்கின்றார்.

     இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றல், பெயரினும் வினையினும் மெய் தடுமாறல், ஒரு சொற் பலபொருட்குரிமை தோன்றல், பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றல், என்னும் நான்கும் எல்லாச் சொற்கும் பொது விலக்கணமாதல் அறிக.

     தொல்காப்பியர் உரிச்சொற்குக் கூறும் இலக்கணத்தையும், அதற்கு எடுத்துக்காட்டும் சொற்களையும் ஊன்றி நோக்கும்போது, செய்யுளி லேயே சிறப்பாய் வழங்கும் சொல்லும், செய்யுளிற் சிறப்பான பொரு ளைக் கொள்ளும் சொல்லுமே, உரிச்சொல்லெனத் தெரிய வருகின்றது.

  எ-டு : எறுழ், துவன்று-சிறப்புச் சொல்
செல்லல், வம்பு-சிறப்புப் பொருட் சொல்.
  "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன."

(உரியியல், 2)

என்பது, வெளிப்பட்ட குழூஉக் குறியும் வெளிப்படாத குழூஉக்குறியும் போன்ற இருவகைச் சொற்களைப் பற்றியதாகும்.

     நன்னூலாசிரியரான பவணந்தி முனிவர் உரிச்சொல்லின் உண்மையான இயல்பை உணர்ந்தே,
  பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல்".

(442)

  .........................................பிங்கலம் முதலா
நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே".

(460)

எனக் கூறினார் என்க. இதனால், தொல்காப்பிய உரியியலே இடைக்கால நிகண்டு என்னும் உரிச்சொற்றொகுதி வாயிலாய் இற்றை அகரமுதலிக்கு மூலம் என அறிக.
     உரிச்சொற்களை யெல்லாம் தொகுத்துப் பொருள் கூறும் சொற் றொகுதிகள் (நிகண்டுகள்), வடநூலாரின் வேர்ச் சொற்றொகுதியை (தாது ரூபா வளியை) ஒருபுடையொத்திருத்தலால், பெரும்பாலும் வேர்ச் சொல்லாயிருக்கும் வினையடிகளை யெல்லாம் உரிச்சொல்லாக மயங்கி னர் சிவஞான முனிவர்.
     சில உரிச்சொற்கள் குறிப்புப் பெயரெச்சமாகவும் குறிப்பு வினை யெச்சமாகவும் இருத்தல் பற்றி, ஒரு, இரு முதலிய குறிப்புப் பெயரெச்சங் களையும் சிலர் தமிழிலக்கணப் பாடப் பொத்தகங்களில் உரிச்சொல் லெனக் குறிப்பாராயினர். இவை, பொதுவளவுப் பண்புணர்த்தும் சிறு, பெரு என்பன போல், எண்ணளவுப் பண்புணர்த்தும் குறிப்புப் பெயரெச்சங்களே (adjectives) என அறிக.