55. சிவ | |
| சிவல் = செந்நிலம். சிவலை = செங்காளை. |
(a) | சிவம் = சிவப்பு, தீக்கடவுள், சிவன். |
| சிவப்பு = சிவப்புக்கல், கோபம். |
| சிவம் - சிவன், சிவை = உமை |
| சிவ - துவ - துவர் = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை. |
| துவரை = சிவந்த பயறு. |
(b) | சிவ - செம். |
| செம்மை = செந்நிறம், ஒழுங்கு, நேர்மை. |
| செக்கர் = செவ்வானம். செம்மான் = சக்கிலியன். |
| செம்பு = சிவந்த உலோகம், அதனாற் செய்யப்பட்ட நீர்ப்பாத்திரம். |
| செம்மல் = நேர்மையுள்ளவன், தலைவன். |
| செப்பம் = சீரான நிலை. |
| செவ்வை = செப்பம், சீர், செவ்வி = தகுந்த சமையம். |
| செவ்வன் = செவ்வை. |
(c) | சிவ - சே. |
| சேந்தன் = சிவந்தவன், முருகன். |
| சேய் = சிவந்தவன், குழந்தை, முருகன் |
| சேயோன் = முருகன். |
56. சுள் | |
| சுர் - சுள் = சுடற் குறிப்பு. |
| சுள்ளை = செங்கல் சுடுமிடம். |
| சுள்ளை - சூளை. |
| சுள்ளி = காய்ந்த குச்சு. |
| சுண்டு = வெந்து சுருங்கு, சுருங்கியது, சிறிய மாகாணிப் படி |
| சுண்டுவிரல் = சிறிய விரல், சுண்டெலி = சிறிய எலி. |
| சுண்டை = சிறிய காய். |
57. சுர். | |
| சுர் = நெருப்புக் குறிப்பு. |
| சுரீர், சுறீர் = நெருப்புக் குறிப்புகள். |
| சுருசுருப்பு, சுறுசுறுப்பு = நெருப்புப்போல் வேகமாயிருத்தல்.கருத்து, |
| சுருக்கு, சுறுக்கு = திடுமெனச் சுடற் குறிப்பு. |
| சுருத்து, சுறுத்து = உணர்ச்சி. |
| சுரம் = காய்ச்சல், காய்ந்த பாலை நிலம். |
| சுரன் = சூரியன், தேவன். |
| சூரன் = சூரியன் |