பக்கம் எண் :

போலிக யுருப்படிகள்37

இணைமொழி:

     அவரை துவரை.

சிறப்புக் குறிப்பு

 

"அவரை கொய்யுந ரார மாந்தும்"
"சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு"

(புறம். 215: 5).

(புறம். 335:5)

என்னும் புறப்பாட்டடிகள், பண்டைக் காலத்தில் அவரையும் காட்டில், மொச்சைபோல விளைக்கப்பட்ட தென்றோ, மொச்சையும் அவரை யெனப் பட்டதென்றோ, கருத இடந்தரும்.

     கொட்டையவரை யென்று பதார்த்த குண சிந்தாமணி குறித்தி ருப்பது. ஒரு தனி வகையாகத் தெரியவில்லை.

சீர்திருத்தம்:

     சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலி, கோழியவரையை வாளவரை (sword-bean) யென்று குறித்துள்ளது.

     ஆரால் மீனவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை, சுடலை அவரை முதலிய பெயர்கள் அதிற் குறிக்கப்பெற வில்லை.

     மேல் நாட்டுத் தமிழறிஞர் தம் அறியாமையால் அவரைக்காய் என்பதன் திரிபான அவரக்க, அமரக்க என்னும் சொற்களையும் அவரையைக் குறிக்கும் தனிச் சொற்களாகக் குறித்துள்ளனர்.

3. இஞ்சி

சொல் : இஞ்சி

வழக்கிடம் : இஞ்சி1 - இலக்கியம்
இஞ்சி2 - தமிழகம்

சொல்வகை : பெயர்ச்சொல்

     இஞ்சி1 = கட்டிட வடிவான இடப்பெயர்
     இஞ்சி2 = அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர்.

வேற்றுமைப்பாட்டு வகை.

     முதல்வகை (சாரியை யில்லது), எ-டு: இஞ்சியை, இஞ்சியால், இஞ்சிக்கு, இஞ்சியின், இஞ்சியது, இஞ்சியில்.

இயல் விளக்கம்

     இஞ்சி1 - செம்புருக்கிச் சாந்தாக வார்த்து இறுகக் கட்டிய திண் ணிய கோட்டை மதில் வகை.

     இஞ்சி2 - பித்தத்தைப் போக்குவதும், மருந்துகளிலும் கறிவகை களிலும் பெரும்பாலும் கூட்டுச் சரக்காகச் சேர்க்கப்படுவதும், கார்ப்புச் சுவையுள்ளதுமான, கிழங்குள்ள பூண்டுவகை.