17 அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு |
கி. மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியத்தில், |
| "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து" |
என்று வேங்கடமலைக்கு அல்லது வேங்கடக் கோட்டத்தின் வடவெல் லைக்குத் தெற்கிலுள்ள நிலமெல்லாம் தமிழ்நாடெனக் குறிக்கப்பட்டது. அதற்குட்பட்டதே வெங்காலூர் (Bangalore). |
| "கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்" "கோற்றொடி மாதரொடு குடகர் தோன்ற" |
என்னும் சிலப்பதிகார அடிகளால் கி.பி.2ஆம் நூற்றாண்டில் கருநாடு (கருநாடகம்), குடகு என்பன மொழிப்பெயராகவன்றி நாட்டுப் பெயரா கவே வழங்கியமை அறியப்படும். |
கி. பி. 7ஆம் நூற்றாண்டினரான குமரிலபட்டர் தமிழையும் திராவிட மொழிகளையும் 'ஆந்திர திரவிட பாஷா' என்று தொகுத்துச் சுட்டியதால், அவர் காலத்திலும் கருநாடகமொழி தனிமொழியாகப் பிரியாது தெலுங்கில் அடக்கப்பட்டிருந்தமை தெளிவாம். |
எல்லா வகையிலும் தமிழிலக்கியத்திற்கு மிகமிகத் தாழ்ந்த கன்னட இலக்கியமும் கி.பி.8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே. |
தொல்காப்பியக் கிளவியாக்க 51ஆம் நூற்பாவுரையில், இளம் பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர் முதலிய உரையா சிரியர் காட்டியிருக்கும் |
| "வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார்." |
என்னும் பழைய மேற்கோட் செய்யுளும், "கொடுங் கருநாடரும்" என் னும் இளங்கோவடிகள் குறிப்பும், "இதெல்லாம் பழைய கருநாடகம்" என்னும் வழக்கும், பண்டைக் கருநாடக மாந்தரின் நிலைமையை உணர்த்தும். மேனாடுகளுள் இங்கிலாந்து ஏனையவற்றினும் நாகரிகப் பண்பாட்டில் ஏற்றமாயிருந்தது |