பக்கம் எண் :

104தமிழ்நாட்டு விளையாட்டுகள்

மூன்றாம் வகை
     ஆட்டின் பெயர் : இது சரிகைப் பாண்டி எனப்படும்.
     ஆடுமுறை : இதுவும் ஒற்றைச் சில்லி போன்றதே. ஆயின் இருவரிசைக் கட்டங் களிலும் ஆடப்பெறும். இடவரிசையில் சில்லி யெறியும்போது வலவரிசை வழியாகவும், வலவரிசையிற் சில்லி யெறியும்போது இட வரிசை வழியாகவும் செல்லவேண்டும். இட வரிசை யுச்சிக்கட்டத்தில் காலூன்றிக் கொள்ள லாம்.
     நடந்து செல்லவேண்டிய பகுதிகள் மேற்கூறிய இரண்டாம் வகையைப்போல் ஆடப்பெறும்.

III. வானூர்திச் சில்லி

     ஆட்டின் பெயர் : வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி வானூர்திச் சில்லியாம். இதை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர்.
     மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும்.
     ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.
     ஆடுகருவி : மேலே காட்டப்பட்டபடி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும்,  இதை ஆடுகருவியாகும்.
     ஆடுமுறை : முதலாவது, முதற் கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டியடித்து அக் கட்டத்தைத் தாண்டி, மேற்கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டி யடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற்கொன்றாக ஒரே சமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை