பக்கம் எண் :

134தமிழ்நாட்டு விளையாட்டுகள்

(3) இருபொழுதாட்டு

முக்குழியாட்டம்

     இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலுமிச்சங்கா யளவான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது, முக்குழியாட்டம் எனப்படும்.
     இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நிலவிரலி லும் ஆடப்பெறும். திருச்சிராப்பள்ளி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடுவர்.