பின்னிணைப்பு |
I. வழக்கற்ற விளையாட்டுகள் |
1. அறியப்பட்டவை |
(1) ஆண்பாற் பகுதி |
வட்டு |
இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும். |
(2) பெண்பாற் பகுதி |
1. பல பந்து |
ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இருமகளிர் 7 பந்தும் 12 பந்தும் கொண்டாடியது பெருங் கதையுள்ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு. |
2. அம்மானை |
மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறுடையதும் 'அம்மானை' என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பல பந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே. |
உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின் எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை |
என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம். |