| 3. அணிற்பிள்ளை |
| ஆட்டின் பெயர் : ஒருவன், ஒரு பெருஞ் சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கியாடும் ஆட்டு அணிற்பிள்ளை எனப்படும். |
| ஆடுவார் தொகை : இதை ஐவர் ஆடுவர். |
| ஆடுகருவி : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடுகருவிகளாம். |
| ஆடிடம் : பொட்டலும், அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம். |
| ஆடுமுறை : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவனாக, நால்வர் நின்றுகொள்வர். பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப் படும். ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில் |