பக்கம் எண் :

78தமிழ்நாட்டு விளையாட்டுகள்

பாட்டுப்பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.

பாண்டிநாட்டுப் பாட்டு

     (1)  த : பாக்குவெட்டியைக் காணோமே.
         வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
     (2)  த : வெற்றிலைப் பெட்டியைக் காணோமே.
         வ : தேடி ஓடிப் பிடித்துக்கொள்.
     (3)  த : ஆடுகிடக்கிற கிடையைப் பார்.
         வ : ஆட்டுப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
     (4)  த : குட்டி கிடக்கிற கிடையைப் பார்.
         வ : குட்டிப் பிழுக்கையைத் தூர்த்துப் பார்.
     (5)  த : பல்லே வலிக்குதே
         வ : நெல்லைக் கொறித்துக்கொள்.

கொங்குநாட்டுப் பாட்டு

     (1)  த : பருப்புச் சட்டி.
         வ : திருப்பி நக்கு.1
     (2)  த : வாழை யிலை.
         வ : வழித்து நக்கு.2
     (3)  த : ஊசியாலே குத்துவேன்.
         வ : வீட்டுமேலே ஏறுவேன்.
     (4)  த : கிணற்றிலே குதிப்பேன்.
         வ : கல்லெடுத்துப் போடுவேன்.
     (5)  த : தலையே நோகுதே.
         வ : தலையணை போட்டுக்கொள்.
     ஆட்டுத் தோற்றம் : இந்த ஆட்டு, நரி ஆட்டுக்குட்டி களையோ, பருந்து கோழிக் குஞ்சுகளையோ, பிடிப்பதினின்று தோன்றியதாகத் தெரிகின்றது.
 

1,2. 'நக்கு' என்னுஞ் சொற்குப் பதிலாக 'நொக்கு' என்று வைத்துக் கொள்ளலாம். நொக்குதல் = உண்டு குறையச் செய்தல், மிகுதியாக வுண்ணுதல்.