பக்கம் எண் :

89தமிழ்நாட்டு விளையாட்டுகள்

5. தண்ணீர் சேந்துகிறது

     நான்கு பிள்ளைகள், சதுரமாக நெருங்கி ஒற்றைக் காலால் நின்று மற்றைக் காலைக் கால்மேற்போட்டு, நடுவிற் கிணறு போன்ற பள்ளம் தோற்றி,
      "தண்ணீர் சேந்தித் தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்று,
       பூப்பறித்துப் பூப்பறித்துக் கூடையிலே போடு,
       விற்றுவிற்றுப் பணத்தையெடுத்துப் பெட்டியிலே போடு,"
என்று பாடிக்கொண்டு, தண்ணீர் சேந்திக் குடத்திலே ஊற்றுவதுபோன்றும், பூப்பறித்துக் கூடையிலே போடுவது போன்றும், பூ விற்ற பணத்தைப் பெட்டியிலே போடுவது போன்றும், அவ்வவ் வடிக்கேற்ப அவிநயஞ் செய்வர்.
     ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சியை இவ் விளையாட்டாற் பெறலாம்.