பக்கம் எண் :

17

Untitled Document


காலத்தில் பிரஞ்சிந்தியன் ஒவ்வொருவனும் தன் நாட்டின் கடமையைச்
செய்திருக்கிறான்.அஞ்சாது செய்தான்,பொருளால், உடலால், உயிரால்!
அங்கே பிரிட்டீஸ்காரனிடத்திலிருந்து      தன்னைக் காத்துக்கொண்ட
‘‘கை’’ ஒவ்வொன்றும்     பிரஞ்சிந்தியன் ரகசிய முறையில் அனுப்பிய
‘ இருப்புக்கை ’ யல்லவா?

     இங்குள்ளவர்கள்   பிரஞ்சுக்காரருக்கு    அடிமைகள் அல்லர்.
அவர்களுக்கு இங்குள்ள          உரிமையைக் கேளுங்கள்’’ இங்கு
அடைக்கலம் புகுந்த பாரதியார், வ.வெ.சு. அரவிந்தர், சர்மா இன்னும்
இங்கு      வெளிப்படையாகச்        சொல்ல முடியாத மிகப்பலர்
ஆகியோருக்குப் பிரஞ்சிந்தியர்   செய்துள்ள    உதவியை - அதன்
விரிவை   ‘தினமணி’         கேள்விப்பட்டிருக்கலாம்.பிரஞ்சிந்தியர்
பிரஞ்சுக்காரனின்      அடிமைகளாயிருந்தால் அத்தகைய உதவியை
நாங்கள்     செய்திருக்க முடியாதே.அப்போது     பிரஞ்சிந்தியரின்
நோக்கத்திற்குப   பிரஞ்சுக்காரன்        ஓரிம்மியும்  எதிராயிருக்க
முடிந்ததுமில்லையே !         எதிராயிருந்ததுமில்லையே.இது பற்றிப்
பின்னும் எழுதுகிறோம்.