காமராசரை அல்லாமல் வேறு தலைவர்களை வெற்றிபெறும்படி செய்தாலோ அவர்கள் பொதுப்பணத்தைத் திருடுகின்றவர்கள்; மக்களின் மேல் அன்பில்லாதவர்கள். இப்போது வடவனைத் தமிழ் பற்றியும் தமிழகம் பற்றியும், தமிழ்நாடு பற்றியும், வானொலி பற்றியும் எதிர்க்காத காமராசர், வெற்றி பெற்றபின் எதிர்ப்பாரா என்று கேட்கலாம். எதிர்க்காவிட்டால் தூக்கி எறிய வேண்டியதுதானே! வேண்டியது தமிழரிடம் ஒற்றுமை! கடமை; காமராசரை வெற்றி பெறச் செய்வது! நோக்கம்: வடக்கனைத் தொலைப்பது!
|