பிராமணரே. இங்ஙனமே, ஏனைவகுப்பாரும் கல்வியல்லாத மற்றத் தொழில்களையெல்லாஞ் செய்துகொண்டு, உலகுள்ளவரையும்உடனுண்டலும் மணவுறவுமின்றி, வெவ்வேறு இருப்புக்கூண்டுக் குலங்களாக இருந்துவரவேண்டுமென்று அவர்விரும்புகின்றனர். இதனால், நாட்டுமக்கள்முன்னேற்றமும் ஒற்றுமையு மின்றி, வந்தேறிகளானபிராமணர்க்கே என்றும் அடிமைத்தொண்டுசெய்துவருமாறு, வரணாச்சிரம தருமம் என்னும்குலவொழுக்கத் திட்டம் வகுக்கப் பட்டதென்பதுதெளிவாகின்றது. இற்றைப் பிறவிக் குலங்கள்
அகம்படியன் தொழில் - பண்டைநாளில் மறவர்குலமன்னர் மாளிகைகளில் அகம்படித் தொண்டு(இல்லப்பணி) செய்தவர். இன்று தென்மாவட்டங்களிற் பயிர்த்தொழிலும்வடார்க்காட்டு மாவட்டத் திற் கொத்த (கட்டட)வேலையும் செய்பவர். பிரிவு - ஐவழி நாட்டான்,கோட்டைப்பட்டு முதலிய பன்னீரக மணப் பிரிவுகள் (Endogamoussteps). பட்டம் - அதிகாரி, சேர்வைகாரன்,பிள்ளை, முதலியார். "கள்ளன் மறவன் கனத்தோர்அகம்படியன்" என்னும் பழமொழி, குலந்தோன்றியவழியைக் காட்டும். அம்பல(க்)காரன் தொழில் - பயிர்த்தொழிலும்ஊர்காவலும். பிரிவு - முத்திரியன் (முத்தரையன்),காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலகமணப்பிரிவுகள். பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன்(முத்தரசன்), அம்பல காரன், மழவராயன் (மழவரையன்),வன்னியன், மூப்பன். அளவன் தொழில் - உப்பளத்தில் உப்புவிளைத்தல். பட்டம் - பண்ணையன், மூப்பன். இடையன் பெயர் - அண்டன், ஆயன்(ஆன்வல்லவன்),இடையன், குடவன், கோவன் (கோன், கோனான்),கோவலன், தொறுவன், பொதுவன்.
|