பக்கம் எண் :

118தமிழர் வரலாறு-2

ஏலக்கொத்து  

- குடையன் கிளை, அரசுமான்கிளை.

மிளகுகொத்து  

-செகமண்டலாதிபன் கிளை, வீர முடிதாங்கினான் கிளை.

நற்சீரகக்கொத்து  

-நாட்டை வென்றான் கிளை,தருமர்கிளை.

தக்காளிக்கொத்து  

-சங்கரன் கிளை, சாத்தான் கிளை.

தென்னங்கொத்து  

-ஒளவை கிளை, சாம்புவன் கிளை.

பட்டம்-தேவன், தலைவன், கரையாளன்,சேர்வைகாரன்.

முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)

வேளிர் (குறுநில மன்னர்) பதவியும்விருந்தோம்பி வேளாண்மை செய்யும்இயல்புங்கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார்,6ஆம் நுறாறாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்தமை,

"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்" 

(நாலடி.200)

"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்" 

(நாலடி.296)

என்னும் நாலடிப் பகுதிகளால் அறியக்கிடக்கின்றது.

அவர் தஞ்சைக்கும்புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால்தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்தசோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும்பிடுகுமுத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச்செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளிமாவட்டங்களிற் பயிர்த் தொழில் செய்து வாழும்முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர்வழியினரே.

தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பியமுத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர்வகுப்பினர், முத்தரையரின் படைமறவர்வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்திற் புல்லியும்பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்றகள்வர் கோமான்கள் பலர் இருந்தமைவெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர்மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.