பக்கம் எண் :

தமிழர் வரலாறு-217

அது புகாரில் நாளங்காடியில் நின்றுநாள்தொறும் படையலுண்டு வந்தது.

இக் கதையே சிலப்பதிகாரத்தில்,

"கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிக்
கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தன ராகி
நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்துபலி யுண்ணும் இடனும்" 

(சிலப்.6:7-13)

என்று கூறப்பட்டுள்ளது.

சீன நாட்டிற்கு வானவர் நாடு என்றொருபெயருண்டு. அந் நாடு பூதக் கதைகட்குப் பெயர் போனதென்பது அலாடின் கதையால் அறியப்படும்.

முசுகுந்தன் சீனநாட்டரசன் ஒருவனொடுநட்புக் கொண் டிருந்து, அவன் நகருக்குச்சென்றிருக்கலாம். அன்று கலுழவேகன் என்பானொருவன்அமிர்தபதி என்பா ளொருத்தியைக் கவர்ந்துசென்றிருக்கலாம். சீனவரசன் முசுகுந்தனைத் தன்நகரைக் காக்குமாறு இருத்திவிட்டு அமிர்தபதியைமீட்கச் சென்றபின், ஊணர் (Huns- ஹூணர்) என்னும் நடு ஆசியவாணர் சீனத் தலைநகரைத்தாக்கி முசு குந்தனால் முறிடிக்கப்பட்டிருக்கலாம்.சீன அரசன் தனக்குத் துணையென்று கொண்டிருந்தபூதப்படிமையைப் புகாருக்கு அனுப்பியிருக்கலாம்.

புலவர் குழந்தையார் முசுகுந்தனைமுதுகாந்தன் என்பர்.

முசுப்போற் குந்தியிருப்பவன் என்னும்பொருள் கொண்ட தாயின், முசுகுந்தன் என்பது தூயதென்சொல்லே. முற்பிறப்பில் முசுக் கலையாயிருந்தான் என்னுங் கதை இக்காலத்திற்கொள்ளத்தக்க தன்று.

சிபி என்பவன், புறாவைத் துரத்தியபருந்திற்குத் தன் தசையை அறுத்துக் கொடுத்தசெம்பி அல்லது செம்பியன் என்னும் சோழனே. அவன்பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது.இதையறியாத (அல்லது அறிந்தே ஏமாற்றுகின்ற)வடமொழிப் புலவர், சோழர் சிபி என்னும் வடநாட்டுஆரிய வரசனின் வழியினராகக் கூறி மகிழ்வர்.

இராமன் காலத்தவனான பரசுராமன்,கார்த்தவீரியார்ச்சுனன் மக்கள் எய்தஇருபத்தோரம்பு பட்டு இருபத்தொரு முறை தன்மார்பில் அடித்துக்கொண்டிறந்த, தன் தாயைக்கொன்றதற்குப்