|
மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள் |
(1) | சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப் | | பட்டுப் பிற தமிழ் நாடுகளுடன் பெருந் தொடர்பு | | கொள்ளாதிருந்தமை. |
|
(2) | 12 ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் | | நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் | | மணவுறவு நிறுத்தியமை. |
|
(3) | வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ | | உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற் | | கலப்பும். |
|
(4) | மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை. |
|
(5) | மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் | | கல்லாமை. |
|
(6) | மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல். |
|
மலையாளம் திரிந்த முறைகள் |
(1) | முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல் | | எ-டு: வந்தான் - வந்து. |
|
(2) | மெலித்தல் திரிவு | | எ-டுஎழுந்து-எழுந்நு, அங்கு-அங்ஙு, கழுகு - கழுங்ஙு, | | குஞ்சி-குஞ்ஞி, வீழ்ந்து-வீணு. |
|
(3) | நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடைநிலை | | உன்னு எனத் திரிதல் | | எ-டு:செய்கின்ற - செய்குன்னு - செய்யுன்னு. |
|
(4) | வேற்றுமை யுருபுத் திரிவு. | | எ-டு:அதினுக்கு - (அதின்கு) - அதின்னு, உடைய - | | உடே- டே - றே. |
|
(5) | போலித் திரிவு | | எ-டு:நரம்பு - ஞரம்பு, செய்ம்மின் - செய்வின். |
|