பக்கம் எண் :

84தென்சொற் கட்டுரைகள்

மழ

மழ-(மழை)-வழை=புதுமை.

  "பாகரிறை வழைமது நுகர்பு",

(பரிபா, 11 : 66.)

   - வ,  மெய்யினத் திரிபு.  ஒ.நோ: மிஞ்சு  - விஞ்சு.
  மழ  - மழு  - மழுக்கை  - வழுக்கை. வழுக்கைப்பயல்  = சிறு பயல்.
  வழுக்கை  - வழுக்கட்டை  = சிறு பிள்ளை.
  வழை  - வழைச்சு  = புதுமை.

  "சாடியின் வழைச்சற விளைந்த"                                      

(பெரும்பா. 280)

    புதுமை சிறுமை அழகு வீரம் முதலியன இளமையொடு தொடர் புடைய கருத்துகள். அதனால், இளமையைக் குறிக்கும் சொற்கள் இப் பொருள்களை உணர்த்தின.

  மழலை - மதலை  = குழந்தை மொழி, குழந்தை, மகன்.
  மதலைக்கிளி  = இளங்கிளி.
  மழ-(மத)-மட-மடம்  = இளமை, மென்மை, அழகு, அறியாமை.
  மடமை  = 1. மென்மை. "தெளிநடை மடப்பிணை"

(புறம். 23)

      2. அறியாமை  

    அறிவு பெரும்பாலும் ஆண்டுப் பெருக்கத்தால் அடையப் பெறுவதால், இளமையில் அறியாமை மிகுந்திருப்பது இயல்பு. இதனால், இளமைச்சொல் அறியாமையை உணர்த்திற்று.

  மள் - (மண்) - மணி  = சிறியது.

    மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை, மணிச்சம்பா, மணிச்சுறா, மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்பயல், மணிப்புன்கு, மணிப்புறா, மணிப்பொச்சம், மணியீரல் முதலிய வழக்குகளை நோக்குக.

  மண் - மாண்  - 1, சிறுவன், இளைஞன், மணவாதான் (பிரமசாரி).
      "மாணாகி வைய மளந்ததுவும்"

(திவ். பெரியதிரு மொழி; 8 : 10 : 8,)

      2. குறள், குறளன்.
      "குறுமா ணுருவன் தற்குறியாக் கொண்டாடும்" 

(தேவாரம் 164 : 5)

      மாண் - மாணி = 1. மணவாதான், மாணவன்
      "கருமாணி யாயிரந்த கள்வனே"

(திவ்.இயற்பா. 2:61)

      2. குறள் வடிவம்
      (திவ், பெரியாழ்வார் திருமொழி, 1 : 4 : 1 ஸ்வாபதேச வியாக்கியானம்).
      3. சிற்றுறுப்பு.