பக்கம் எண் :

தீர்ப்பாளர்மகராசனார்திருவள்ளுவர்65

"Of Brahmanas and Kshatriyas and Vaishyas, as also of Sudras, O Scorcher of foes, the duties are distributed according to their Gunas born of their own nature." (பக. கீ. 18: 41.)

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பற்றிய தமிழர் கருத்தும் கொள்கையும், ஆரியத்தினின்று முற்றும் அல்லது பெரிதும் வேறுபட்டவையாகும்.

பொருள் வகை தமிழம் ஆரியம்
அறம்(தருமம்) ஈகை அல்லது நல்வினை. அடிப்பட்ட வழக்கு அல்லது பிறவிக்குல ஒழுக்கம் (வருணாசிரம தருமம்), கடமை.
பொருள் (அர்த்தம்)

அறவழியில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தொழிலாற் பொருளீட்ட அரசன் துணையாயிருந்து, தானும் தன் காப்புத் தொழிலாற் பொருளீட்டல்

அரசியல் தொழில் அல்லது கலை. (Political Science)
இன்பம் (காமம்)

ஒருகணவ ஒரு மனைவி அறவழி இருதலைக் காதலின்பம்.

விலங்கியற் காமவின்ப நுகர்ச்சி.
வீடு(மோட்சம்)

இல்லறத்தாலும் துற வறத்தாலும் எல்லாரும் பெறத்தக்கது.

துறவு நிலையாற் பிராமணன் மட்டும் பெறத்தக்கது.

நாற்பொருளுங் கூறும் நூல் "திருக்குறள்" ஒன்றே. அதுபோன்ற தொன்று வடமொழியில் இல்லை.

நாற்பொருளும் தனித்தனி கூறும் தமிழ் நூல்களுள் பொருள் நூல்கள் இறந்துபட்டன.

"மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள"
(தனிப்பா :)

3. தமிழப் பண்பாட்டின் உயர்வு காட்டுவது

எ-டு:

"ஒழுக்கம் உடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்."
(குறள். 133)

"ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க