பக்கம் எண் :

12பாவாணர் உரைகள்

இந்த முறையில் இல்லையே. இந்தி முதலான பிறமொழிகளிலெல்லாம் எத்தனையோ பிறமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்கின்றார்களே. தமிழில் ஏன் சேர்த்துக்கொள்ளக் கூடாது; ஆங்கிலச் சொற்களை அப்படியே வைத்துக்கொள்ளலாமே; ஏன் அவைகளை மொழிபெயர்க்க வேண்டும்; என்றுகூட சிலரிடத்திலே கருத்தெழுகின்றது. அதற்காகத் தான் அடிப்படையாகச் சில கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்று கூறுகிறேன். முதலாவது தமிழர்கள் தெற்கே இருந்து வடக்கே போனார்கள் என்று தெரிந்துகொள்ளல் வேண்டும். பலருக்கு இஃது இன்னும் தெரியவில்லை, பல தமிழாசிரியர்களுக்கும் தெரியவில்லை, சில பேராசிரியர்களுக்கும் கூடத் தெரியவில்லை. தமிழ் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரியாது. ஆனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே நமக்குத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். பி. டி. சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர் போன்றவர்கள் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு ஆகிய வற்றை எல்லாம் நீங்கள் நன்றாக எடுத்துப் பாருங்கள். அதற்கு மேலே, நான் மொழிநூலை, மொழியாராய்ச்சியை வரலாற்று அடிப்படை வைத்தே ஆராய்ந்திருக்கிறேன். வேறு சில கலைகளின் துணை இன்றிய மையாததா யிருந்ததால். அவற்றையும் நான் கற்றிருக்கிறேன்: தமிழர் தெற்கே இருந்து வடக்கே போனவர்கள். அதாவது தெற்கே குமரிநாடு என்று ஒரு பெரிய நிலம் இருந்து மூழ்கி விட்டது. இங்கே இருந்துதான் வடக்கே போனார்கள். கால்டுவெல் அவர்களால் திராவிட மொழிகள் 13 என்று கணக்கிட்டிருப்பவை, 19 என்று கணக்கிடப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் இந்தியா என்ற நாவலந் தீவுக்குள்ளேதான் வழங்குகின்றன. இவற்றுள்ளே சிறந்த பெருமொழிகளெல்லாம், இலக்கிய மொழிகளெல்லாம் இந்தத் தென்னாட்டிலேதான் வழங்குகின்றன. வடக்கே போனால் திராவிடமானது திரிந்தும், சிறுத்தும், சிதைந்தும் போகின்றது. இன்னும் போனால் வட நாவலத்தில், பலுசித்தானத்திலே ஒன்றும், வங்காளத்தில் ஒன்றுமாக, வட இந்தியாவிலே சிதறிக் கிடக்கின்றன. தெற்கே வரவர திராவிடமானது திருந்திக்கொண்டு வருகிறது. நாற்பெரும் திராவிட மொழிகள் எல்லாம் தென்னாட்டில்தான் இருக்கின்றன. அந்த நான்கு மொழிகளுள்ளும் சிறந்த தமிழ் தெற்கே தான் இருக்கிறது. அதனாலே பாண்டியனுக்கும் தென்னவன் என்று பெயர். தென்னாடு என்பதும் சிறப்பாக பாண்டிய நாட்டைத்தான் குறிக்கும். இந்தத் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டாலும் தெற்கே போகப் போகத்தான் தமிழ் திருந்திக் கொண்டே போகிறது. திருநெல் வேலியில் ஒரு வழக்குச் சொல் ஒரு வகையாகச் சொல்லிக் கொள்வார் கள். அது என்ன? மிகவும் திருத்தமாகப் பேசுவ தென்றால், "திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்" என்பார்கள். ஆகவே இந்தத்