பக்கம் எண் :

54பாவாணர் உரைகள்

துறையையே அடியோடு விட்டுவிட்டார்கள். அஃது, இப்பொழுது இங்கே உள்ள ஆரியச் சார்பானவர்களுக்கும், தமிழ்ப் பகைவர்களுக்கும் மிகவும் கொண்டாட்டமா யிருக்கின்றது. ஏனென்றால், வரலாற்று முறையில் ஆராய்ந்துபார்த்தார்களென்றால் இந்த (தமிழ் முந்தியது; ஆரியம் பிந்தியது என்னும்) உண்மை நாளடைவில் வெளிப்பட்டு விடும்; அப்புறம் அவர்கள் ஏமாற்று எல்லாம் தெரிந்துவிடும். அவற்றை அடியோடு மறைத்துக் கொள்ளுதற்கு இந்த வண்ணனை மொழியாராய்ச்சி (வடிவியல் முறையை அடிப்படையாகக் கொண்டது) அவர்களுக்குத் துணை செய்கின்றது.

ஒரு குடும்பத்தில் பெற்றோர் யார்? பிள்ளைகள் யார்? அண்ணன் தம்பி யார்? அக்கை தங்கை யார்? என்றெல்லாம் ஆராய்ந்தறியாமல், ஒரு குடும்பத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? எத்தனைப்பேர் நெட்டையர்? எத்தனைப் பேர் குட்டையர்? எத்தனைப் பேர் என் னென்ன நிறத்தி லிருக்கிறார்கள்? என்னென்ன இயல்பு அவர்களுக்கு உண்டு - இவற்றைத் தாம் எடுத்துச்சொல்ல வேண்டும். மற்றபடி ஒன்றுஞ் சொல்லக்கூடாது. இதுதான் வண்ணனை மொழியாராய்ச்சி.

தெ. பொ. மீ. என்னும் ஒருவரை உங்களுக்குத் தெரியும். நம் பேராசிரியர்களுள் ஒருவர். இப்பொழுது இருக்கின்ற ஒரு கேடான நிலைமை என்னவென்றால், மற்ற நாடுகளிலே இல்லாத ஒரு நிலைமை இங்கே தமிழை எவன் ஆராய்கின்றானோ அவனுக்கு ஒருவகை மதிப்பும் இல்லாமற் போக வேண்டும். அவனுடைய வாழ்க்கைக்கும் இடமில்லை, இங்கே! தமிழை எவன் காட்டிக் கொடுக்கின்றானோ அல்லது பகைக்கின்றானோ அல்லது பகைவரோடு சேர்ந்துகொண்டு கருத்தறிவிக்கின்றானோ அவனுக்குத்தான் நிறைய மதிப்பும் வாழ்வும் ஏற்பட வழியிருக்கின்றன, இங்கே!

தமிழ்மொழியே உலக முதன்மொழி. அஃதாவது திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமானது. திராவிடத்திற்குத்தாய் என்று முதன்முதல் நமக்கு உணர்த்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார். சென்ற நூற்றாண்டிலே, இந்தியா முழுமையும் மட்டுமில்லை, உலக முழுமையும் ஓர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தது ஆங்கில மொழி. அந்த மொழி ஒன்றுதான் உயர்வாகக் கருதப் பெற்றது. அதில் பேசியவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்றோ தேவர்கள் என்றோ மதிக்கப் பெற்றார்கள். தமிழ்மொழி தாழ்த்தப்பெற்ற ஒரு மொழியாக விருந்தது. அது நமக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அந்தக் காலத்தில் மேடை மேல் ஏறியவர்கள் எல்லாரும் "எனக்கு தமிழ்த் தெரியாது" என்று சொல்வதையே பெருமைக்கு ஒரு சான்றாக மதிக்கப்பெற்ற காலம் அது. அந்தக் காலத்திலே, ஆங்கில அறிஞராக ஒருவர் தோன்றினார், தமிழ்த் தொண்டராக! அவர்தாம் பேரா. சுந்தரனார். அவர்தாம் தமிழ் மொழி விழிப்பு உணர்ச்சியை முதன் முதல் தமிழர்களுக்கு ஊட்டியவர். அவர்தாம் தமிழுக்குப்