இம்மட்டும் கலைச்சொல்லாக்க விதிகளும் நெறிமுறைகளும் ஒருவாறு கூறப்பட்டன. தமிழிற் கலைச்சொல்லாக்குவார் எவராயினும் ஆகுக; மேற்கூறிய நெறிமுறைகளை யறிந்து கடைப்பிடிக்க; அஃதன்றி, 'அரசன் முத்தினால் அரம்பை', 'கொண்டவன் பலமிருந்தால் குப்பை யேறிச் சண்டைபோடலாம்' என்ற பழமொழிகட் கிணங்க நடப்பாராயின், அம்பலத்திற் கிழுக்கப்படுவர் என்பதை அறிவாராக. - "செந்தமிழ்ச் செல்வி" மடங்கல் 1941 ------ |