வண்ணனை மொழிநூல் புதிதாக வந்ததென்று அதைப் போற்றுவது, திரைப்பட நடிகையர் மேற்கொள்ளும் மானக்கேடான புதிய உடைமுறைகளையெல்லாம் புது நாகரிகக் கோலமென்று புகழ்வதையே ஒக்கும். |
கருவிகள் இயக்கப்படின் நிறுத்தும்வரை அல்லது தாமாகக் கெட்டு நிற்கும்வரை ஒரே வகையாக இயங்குமேயன்றி, சூழ்நிலைக்கேற்ப நிற்பதும் இடம்பெயர்வதுஞ் செய்யா, தாமாக இயங்கா ஒலிமானிகள் கையாளப்பெறின் திரிபுகளையும் காட்டா. எழுத்துகளின் பல்வேறு திரிபுகளை என் `தமிழ் வரலாறு` என்னும் நூலிற் காண்க. ஏறுமாறான திரிபுகட்கு எடுத்துக்காட்டு வருமாறு; |
| வழுநிலை உ-இ:புல்-பில் இ-உ:பிள்ளை-புள்ளை உ-ஒ:குடை-கொடை ஒ-உ:கொடு-குடு | வழாநிலை உ-இ:புரண்டை-பிரண்டை இ-உ:பிறகு-புறகு உ-ஒ:துளை-தொளை ஒ-உ:பொட்டு-புட்டா(புள்ளி) |
(4) வண்ணனை மொழிநூலார் கண்டவை |
வண்ணனை மொழிநூலைச் சிறப்பாக வளர்த்துவரும் அமெரிக்கர் கண்டவையெல்லாம் எழுத்திற்கு ஒலியும் வரியும் என இருவடி வுண்டென்பதும், ஒவ்வோர் ஒலிக்கும் வேறுபட்ட வரிவடிவிருத்தல் வேண்டுமென்பதும், ஆங்கில நெடுங்கணக்குத் தவறானதென்பதும், எழுத்தொலிகளையும் வாய்மண்டலத்தையும் நுண்பாகுபாடு செய்ததுமே. |
இவற்றுட் பெரும்பாலானவும் பிறவற்றிற்கு அடிப்படையானவும் கி.மு.10,000 ஆண்டுகட்கு முன் தமிழர்கண்டவையே. ஆயின், வண்ணனை மொழிநூலார் இவற்றிற்கு இட்டுள்ள புதிய ஆரவாரப் பெயர்களைக் கண்டே இந்திய இளைஞர் மருண்டு வியக்கின்றனர். |
எழுத்தின் ஒலிவடிவிற்குப் போனீம்(phoneme) என்றும் வரிவடிவிற்குக் கிராப்பீம் (grapheme) என்றும், கிளவியின் சொல்வடிவிற்கு மார்பீம் (morpheme) என்றும், பொருள் வடிவிற்குச் செமன்றீம் (semanteme) என்றும், பெயரிட்டிக்கின்றனர். |
எழுத்து என்பது பொதுவாகத் தமிழில் ஒலியைத்தான் குறிக்கும். வேண்டுமாயின், ஒலிவடிவை ஒலியன் என்றும் வரிவடிவை வரியன் என்றும் குறிக்கலாம். இதனால் தமிழ் பெற்ற சிறப்பும் வளர்ச்சியும் ஒன்று |