பக்கம் எண் :

116வண்ணனை மொழிநூலின் வழுவியல்

வரவேற்புக் கூட்டத்திற் புலவர்க்கு நிகழ்ச்சியில்லாது போனதும், மாநாட்டின் அரசியற் சார்பை விளக்கிக் காட்டும்.
      2. வடிப்புக் குழுத்(Screening Committee) தலைவர் பெரும்பாலும் தமிழ்ப் புலமையும் தமிழ்ப் பற்றும் இல்லாதவரா யிருந்தமை.

குழு

தலைவர்

மொழிநூல் பர்.சுநீதிகுமார்சட்டர்சி
இலக்கியம் பேரா.கோ.சுப்பிரமணியப்பிள்ளை
குமுகாயவியல் பர்.கே.கே.பிள்ளை
கலையும் தொல்பொருள்நூலும் பேரா.பி.சாம்பமூர்த்தி
அறிவியலுங் கம்மியமும்  
பர்.என்.நடராசன்
                வெளிநாட்டு வணிகமும்
 
கலை நாகரிகத் தொடர்பும் பேரா.சேவியர் எசு.தனிநாயகம்
ஒப்பியற்கல்வி பர்.எசு.என்.கத்திரே
தமிழ்க்கட்டுரைகள் பேரா.லெ.பெ.கரு.இராமநாதன் செட்டியார்
      இவ்விரு குறிப்புகளுள் மூவரே தமிழ்ப் புலவர், ஏனையருள் ஒருவர் தமிழ் நாட்டுப் பிராமணர்; ஒருவர் கொங்குணிப் பிராமணர்; ஒருவர் வங்கப் பிராமணர். இம் மூவருள் சமற்கிருத வெறியரான தமிழ்ப் பகைவர் கிரேக்கத்திலிருந்து இயற்றமிழும் வேதத்தினின்று இசைத்தமிழும் தோன்றின என்பவர்.
      3. மாநாட்டுக் கட்டுரையொழுங்குபற்றிய அறிவிப்பிதழில் தமிழின் தொன்மையை மறைக்கவேண்டு மென்னுங்கருத்து வெளியிடப்பட்டமை.
      "உலக அறிஞர்கள், குறிப்பாக மேலைநாட்டு அறிஞர்கள், எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. கண்டிப்பான நெறிமுறையின்படியும், விருப்பு வெறுப்பற்ற நடுநிலையில் நின்றும், அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்துந்தான் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய பழங்குடி என்பது போன்ற தக்க ஆதாரமில்லாத தற்பெருமையான கூற்றுகள், எதையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் நம்முடைய தகுதியிலும் திறமையிலும் அவநம்பிக்கைதான் ஏற்படுச் செய்யும்."