எ-டு: | தமிழ் | செந்து(Zend) | தமிழ் | பாரசீகம் | அதர் | அத்வன் | ஆயிரம் | ஹஸார்(z) | இதா(இங்கே) | இத | கரடி | சர்ஸ்(chars) | உம்பர் | உப்பைரி | கதுவாலி- | | தூணி | த்ரவோண | கவுதாரி | கௌதார் | பற | பத் | கழுகு | கெர்கிஷ் | பரி(வட்ட) | பைரி | குருடு | கூர் | புரை(உயர்வு) | பெரேஸ்(z) | சுவர் | தீவார் | மிகு | மிஹ் | சுடு | ஸு ஸன் | பூ(தோன்று) | பூ(b) | பல்-பல | பரு | நமத்த | நப்த | முகர | முஹர் | பொருளிலக்கணத்தையும் புலனெறிவழக்கத்தையும் கழகச் செய்யுட்கும் உலக வழக்கு மொழிக்குமுள்ள வேறுபாட்டையும் தக்க தமிழ்ப்புலவர் வாய்க்கல்லாத பர்.காமில் சுவெலபில், ஏற்கெனவே தமிழைப்பற்றித் தமக்குள்ள திரிபுணர்ச்சியை, தம் சொந்த ஆராய்ச்சி வெளியீடுகளிலும் பர்.சேதுப்பிள்ளை நினைவு மலரிலும், `தமிழின் வரலாற்றிலக்கணக்கட்டுரைகள் (Lectures on Historical Grammar of Tamil) என்னும் தம் சுவடியிலும், பரக்கக்காட்டி, அதற்கு முடிமணியாக இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரையொன்றில். | "ஒருவரின் தாய்மொழிப் பற்றும் சொந்தக் கலைநாகரிகப் பற்றும் மிக ஏதப்பாடுள்ளதும் வழிவிலகியதுமான ஒரு திருப்பத்தை அடையக்கூடும். மறைமலையடிகளும் ச.சோ.பாரதியும் பாரதிதாசனும் தொடங்கிய போக்குகள், அஞ்சத்தக்க அளவு விரிந்து பரவி உண்மையான தாராளப்படைப்புத்திறனைக் கொன்றிருக்கின்றன. அரசியல் மொழியியல் பண்பாட்டியல் அல்லது கலையியல் தொடர்புறவுத் தடைகள் என்றேனும் நாளடைவில் வெற்றி பெற்றதில்லை. அவை அணித்தாகவோ பிந்தியோ வீழ்ந்து விடுவது திண்ணம்" என்று சிறிதும் அடக்கவொடுக்கமின்றிச் சிறுபட்டித்தனமாகக் கூறியுள்ளார். `நூறாண்டு திரவிட மொழியாராய்ச்சி` என்னும் சுவடியிலும், மனை, mansion என்னும் சொற்கட்குள்ள தொடர்பைக் கண்டு பிடித்த பர்.சி.யூ.போப்பைக் கண்டித்திருக்கின்றார். | | |
|
|