20 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
| 5. இருமுது குரவரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள் திரிந்தும் திரியாதும் பெரும்பாற் பெருமொழிகளில் வழங்குதல். 6. எல்லா மொழிக் குடும்பங்களிலும் ஒன்றிரண்டேனும் தமிழ்ச்சொல்லிருத்தல். 7. ஆரியமொழிகளிலுள்ள சுட்டுச்சொற்களெல்லாம் தமிழ்ச்சுட் டெழுத்துகளினின்றே தோன்றியிருத்தல். 8. தமிழிலக்கண அமைதிகள் பல மொழிகளிற் காணப்பெறுதல். 9. பல மொழிகட்கு அல்லது மொழிக்குடும்பங்கட்குச் சிறப்பாகச் சொல்லப் பெறும் இலக்கண அமைதிகளின் மூலநிலை, தமிழில் இருத்தல். | | தமிழ் உயர்தனி இலக்கியச் செம்மொழி | சான்றுகள் | | 1. பழந்தமிழ் திரவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் இருத்தல். 2. தமிழுக்கும் பிறமொழிகட்கும் பொதுவான தென்சொற்கள் தமிழி லேயே திருந்திய அல்லது தூய வடிவிலிருத்தல். 3. தமிழின் சொல்வளம். 4. தமிழிலக்கணம், பொருள்களை அவற்றின் பகுத்தறிவுண் மையும் இன்மையும்பற்றி, உயர்திணை அஃறிணை என இரு வகுப்பாக வகுத்தல். 5. பண்டைத் தமிழிலக்கியமெல்லாம், உரையும் அகரமுதலியும் உட்படச் செய்யுள் வடிவிலிருந்தமை. 6. வெண்பா, கலிப்பா என்னும் செய்யுள் வகைகட்கொத்த யாப்பு வேறெம் மொழியிலு மின்மை. 7. இலக்கணப் புலவனின் மதிநுட்ப முதிர்ச்சியைக் காட்டும் பொரு ளிலக்கணம் என்றும் தமிழுக்கே தனிச்சிறப்பா யிருத்தல். 8. முதன் முதலாகத் தனியொலியன்களை (phonemes) யெல்லாம் வகுத்ததும், உயிரையும் மெய்யையும் பிரித்ததும், உயிர்மெய்க்குத் தனிவரிவடிவமைத்தும், உயிர்களைக் குறில் நெடிலாகவும் மெய் | | |
|
|