பக்கம் எண் :

30வண்ணனை மொழிநூலின் வழுவியல்

  பல்காற் பழகினுந் தெரியா வுளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும் ஆண்டினும் இலையேல்
வடமொழி வெளிபெற வழங்கும் என்கழு (இ.கொ.7)
என்று தலைகால் தெரியாமல் தாண்டவமாடித் தாறுமாறாக உளறிக் குவித்திருப் பது, மொழியாராய்ச்சியும் தனித்தமிழ் வளர்ச்சியும் மிக்க இக்காலத்திற்கு இம்மியும் ஏலா.
இந்நூற்பாக் கூற்றுக்கட்கு மறுப்பு
      தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் வடமொழி முறைமை வரவில்லை. இது தேசிகரின் திரிபுணர்ச்சியே.
இலக்கணம், இலக்கியம், ஏது, உத்தி, அகரம், மகரம், மாத்திரை, உவமை, உருவகம், காலம், அதிகாரம், குணம், குணி என்பன தமிழ்ச் சொற்களே. கரம் காரம் என்பன தமிழ் எழுத்துச் சாரியைகள். குறிற்குக் கரம், நெடிற்குக் காரம். அவற்றை வடமொழியாளர் கடன்கொண்டனர். அகாரம் மகாரம் என்பன செய்யுளில் இசைநிறைக்க வருமாயின் செய்யுள் திரிபாம்; அன்றேல் வழு வாம். வடமொழியில் இந் நெறியைத் தழுவுவதில்லை. வியாகரணம் சாகித் தியம் என்பனவே வடமொழியில் இலக்கண விலக்கியத்தைக் குறிக்குஞ் சொற்கள்.
வடசொல் தென்சொல் வடசொல் தென்சொல்
நியாயம் முறை,முறைமை விகற்பம் வேறுபாடு
நிமித்தம் பொருட்டு சந்தி புணர்ச்சி
சாத்திரம் நூல்,அறிவியல் விதி நெறி,நெறியீடு
சூத்திரம் நூற்பா அலங்காரம் அணி
தந்திரம் புலம்,நூல் இலேசம் மறைப்பு,துக்குணி
பகுதி முதனிலை காரகம் வினைமுடிபு
விகுதி இறுதிநிலை,ஈறு ஞாபகம் நினைவு,நினைப்பு
பதம் கிளவி,சொல் விசேடணம் அடை,அடைமொழி
பதார்த்தம் சொற்பொருள் விசேடியம் அடைகொளி
ஆதி தொடக்கம்,முதல் விகாரம் திரிபு
அந்தம் முடிவு,இறுதி,ஈறு அநுவாதம் வழிமொழிவு
உதாரணம் காட்டு, எடுத்துக்காட்டு