பக்கம் எண் :

42வண்ணனை மொழிநூலின் வழுவியல்

      வடவர் சந்தி என்னும் சொற்கு ஸம் + தா என்று மூலங்காட்டுவர். அந்தி என்னும் வடிவு வடமொழியில் இல்லை.
      அமைதல் = நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், கெட்டியாதல். அமை= கல்மூங்கில்.
      அமை - அவை = கூட்டம், களம் .ஒ.நோ. அம்மை - அவ்வை. செம்மை - செவ்வை. குமி - குவி, குமை - குவை.
      அவை - சவை. ஒ.நோ : அந்தி - சந்தி, அமை - சமை.
      சவை - ஸபா (வ.) வடமொழியில் இதற்கு மூலம் இல்லை.
      அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்= மணல்தொகை போன்ற பெருந்தொகை யெண்.
      ஆயிரம் - ஹசார் (பெ, இ.,) - ஸஹஸ்ர (வ.) = ஸ + ஹஸ்ர. வடமொழியில் இதற்கு மூலமில்லை.
      உலத்தல் = வளைதல், சுற்றுதல், உருளுதல். உலவுதல் = சுற்றுதல். உலா = சுற்றிவருகை.
      உல - உலவு - உலகு = சுற்றிவரும் கோள். உலகு - உலகம். வடமொழி யில் லோக என்னும் சொற்குச் சொல்லக் கூடியபொருள் பார்க்கப்படுவது என்பதே. லோக் = பார் . E . Look.
      நோக்கு - லோக் (வ.).
      கண்ணகன் (ஆண்பாற் பெயர்) - கண்ணகி (பெண்பாற் பெயர்.) கண்ணகனார் ஓரு பழம்புலவர்.
      கண்ணகி என்னும் தமிழ்ப்பெயர் கன்யகா என்னும் தமிழ்த் திரி சொல்லாகிய வடசொல்லின் திரிபன்று.
      அத்தன் = தந்தை. அத்தி = தாய். பெற்றோரைக் குறிக்குஞ் சொற்கள் பாலீறாகவும் வரும். எ-டு: செல்லப்பன், செல்லம்மை. தட்டான்+அத்தி= தட் டாத்தி. வண்ணான்+அத்தி=வண்ணாத்தி. அத்தன்-அச்சன், அத்தி-அச்சி.
      கள்ளன்-கள்ளச்சி (பெ. பா.), மருந்துவன் - மருத்துவச்சி (பெ. பா.).
      அத்தி என்பதன் ஈறான `திழு ஸ்திரீ என்னும் வடசொல்லின் சிதைவன்று. அத்தி என்னும் தென்சொல் அக்கை என்னும் பொருளில் வடமொழியிலும் வழங்குகின்றது.