| | 4. மக்கள் முயற்சியால் சிறுமொழிகளும் பெருமொழிகளாக வளர்ந் துள்ளன. 5. திரிபினாலும் கலப்பினாலும் பல புதுமொழிகள் தோன்றியுள்ளன. 6. மக்களெல்லாரும் என்றும் ஒரே மொழியைப் பேசுமாறு இறைவன் செய்திருக்கலாம். 7. இறைவன் படைத்திருந்தால் மொழிகள் இன்றிருப்பதினும் மிகச் சிறப்பாகவும் குற்றங்குறையற்றும் இருந்திருக்கும். |
| (2) ஒப்பந்தக் கொள்கை(Contract Theory) |
இது மக்கள் கூடி இன்ன ஒலி இன்ன பொருளுணர்த்துக என்று ஒப்பந் தஞ் செய்துகொண்டது மொழி என்பது. இது உரூசோ கொள்கை இது வெண்ணெய் தடவிக் கொக்குப் பிடிக்குங் கதைபோல் தன்மறுப்புக் கொள்கையாதலால் ஆய்விற்குரியதன்றாம். |
| (3) தூண்டுணர்ச்சிக்கொள்கை (Instinct Theory) |
இது, இயற்கையாக மாந்தனிடையெழுந்த தூண்டுணர்ச்சி யொலி களால் மொழிதோன்றிற் றென்பது. இது காண்டிலக்கு கொள்கை. இதுவும் இறைவன் படைப்புக் கொள்கைபோல் ஏரணமுறைக்கு ஒவ்வாததே. |
| (4) குறிப்பொலிக்கொள்கை(Pooh-pooh Theory) |
இது மாந்தனின் இன்ப துன்பக் குறிப்பொலிகளால் மொழி தோன்றிற்றென்பது. குறிப்பொலிகள், ஒருசில கருத்துகளையேயன்றி எல்லாக் கருத்துகளையும் உணர்த்தும் சொற்றொகுதியைத் தோற்றுவிக்கும் ஆற்றலற்றவையாகும். |
| (5) ஒப்பொலிக்கொள்கை(Bow-wow Theory) |
இது விலங்கு பறவைகளாலும் பல்வேறு நிகழ்ச்சிகளாலும் எழும் ஒலிகளைப் பின்பற்றிய சொற்களைக் கொண்டு மொழி தோன்றிற் றென்பது. ஒப்பொலிகளும் எல்லாக் கருத்துகளையும் உணர்த்தும் சொற்களைப் பிறப்பிக்கும் ஆற்றலற்றவையே. |