அரசர்க்குப் பிறப்பினும், இறப்பே சிறப்பாதலால், கொற்ற அடைமொழியில்லாத அரசரெல்லாம், அவர் இறந்த இடப்பெய ரால் வேறுபடுத்திக் கூறப்பட்டனர். அரசரிறந்தபின், அவருடம்பைத் தாழியாற் கவித்தலும், தாழி யாற் கவித்துப் புதைத்தலும், வெறுமனே புதைத்தலும், முற்கால வழக்கம்; எரித்தல் பிற்கால வழக்கம். அரசருக்கு இறுதிச் சடங்கி யற்றல் பள்ளிபடுத்தல்(பள்ளிபடை) என்றும், அவர் நினைவுக் குறியாக எழுப்பப்படுங் கட்டடம் பள்ளிப்படைக் கோயில் என்றும் பெயர்பெறும். அரசக்குடி முடிவு: முத்தமிழரசரும் தமிழாலும் மணவுற வாலும் இணைக்கப்பட்டு ஒற்றுமையாயிருந்த வரை, அசோகப் பேரரசனாலும், அவரை அசைக்க முடியவில்லை. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், தமிழ் பேணாமை ஒற்றுமையின்மை குலப்பிரிவினை சேரர் குடியில் இறுதியாக விருந்த அரசர் வலிமை யற்றவரா யிருந்ததினால், சேரநாடானது. வேணாடு (திருவிதங்கோடு)கொச்சி கோழிக்கோடு கோலத்துநாடு முதலிய பல சிறு தனியரசுகளாகப் பிரிந்துபோனதுடன், 17ஆம் நூற்றாண்டில் வடசொற் கலப்பால் மலையாள நாடாகவும் திரிந்துவிட்டது. இங்ஙனம், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வந்தவை யெனப் பாராட்டப்பெற்ற மூவேந்தர் குடிகளும், 17ஆம் நூற்றாண்டி டையில் முடிவுற்றன. |